சென்னை: இன்று பிறந்த நாள் காணும் கவிஞர் வைரமுத்துவுக்கு திமுக தலைவர் கருணாநிதி, நடிகர் ரஜினிகாந்த் ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
தனது பிறந்த நாளையொட்டி இன்று காலை அண்ணா நினைவிடத்துக்கு சென்று மலர் வளையம் வைத்து வணங்கினார் கவிஞர் வைரமுத்து. கடற்கரைச் சாலையில் உள்ள கம்பர், இளங்கோவடிகள், பாரதியார், திருவள்ளுவர், பாரதிதாசன், அவ்வையார், வீரமா முனிவர் போன்றோர் சிலைகளுக்கு மலர் தூவி வணங்கினார்.
தியாகராய நகரில் உள்ள கண்ணதாசன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார். பின்னர் கோபாலபுரத்தில் உள்ள தி.மு.க. தலைவர் கருணாநிதி வீட்டுக்குச் சென்றார். அங்கு கருணாநிதியை நேரில் சந்தித்து வாழ்த்துப் பெற்றார்.
வைரமுத்துவுக்கு ம.தி.மு.க. பொதுச்செயலளர் வைகோ, மு.க.ஸ்டாலின், ஜி.ராமகிருஷ்ணன் போனில் வாழ்த்து தெரிவித்தனர்.
நடிகர்கள் ரஜினிகாந்த், கமல் ஹாசன் போன்றோரும் போனில் வாழ்த்து கூறினார்கள். நடிகர் பாண்டியராஜன் உள்ளிட்ட பலர் நேரில் சென்று வாழ்த்தினர்.
1980-ம் ஆண்டு நிழல்கள் படத்தில் இளையராஜா - பாரதிராஜாவால் பாடலாசிரியராக அறிமுகப்படுத்தப்பட்டவர் வைரமுத்து. இது ஒரு பொன்மாலை பொழுது.. பாடல்தான் அவரது முதல் பாட்டு.
இதுவரை 7000 பாடல்களுக்கு மேல் எழுதி உள்ளார். 6 முறை சிறந்த பாடலாசிரியருக்கான தேசிய விருது பெற்றுள்ளார்.
Post a Comment