சென்னை: இயக்குநர் மணிரத்னம் இயக்கும் புதிய படத்தின் மூலம் மீண்டும் தமிழுக்குத் திரும்புகிறார், நடிகை ஐஸ்வர்யாராய். ஓ காதல் கண்மணி படத்தைத் தொடர்ந்து மணிரத்னம் இயக்கப் போகும் அடுத்த படத்தில் கார்த்தி நடிக்கிறார்.
2 நாயகர்களைப் பற்றிய படம் என்பதால் தளபதி படத்தில் நடித்த மம்முட்டி, கார்த்தியுடன் இணைந்து இந்தப் படத்தில் நடிக்கவிருக்கிறார். படத்தின் கதையை முடித்து நடிகர்களைத் தேர்ந்தெடுத்த மணிரத்னம் அடுத்து நாயகியையும் தேர்வு செய்து விட்டார் என்று கூறுகிறார்கள்.
மணிரத்னத்தின் விருப்பமான நாயகியான ஐஸ்வர்யா ராய் இந்தப் படத்தில் நாயகியாக நடிக்கவிருக்கிறார் என்று கூறுகிறார்கள். இருவர், குரு, ராவணன் என்று ஏற்கனவே மணிரத்னத்தின் படங்களில் நடித்திருப்பதால் மீண்டும் அவரையே இந்தப் படத்தில் நடிக்க வைக்க மணிரத்னம் விரும்புகிறாராம்.
மணிரத்னம் படங்களில் நடிப்பதை மிகவும் விரும்பும் ஐஸ்வர்யா இந்த வாய்ப்பை கண்டிப்பாகத் தவற விட மாட்டார் என்று, திரையுலகைச் சார்ந்தவர்கள் கூறுகின்றனர்.
விரைவில் படத்தைப் பற்றிய முறையான அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பார்க்கலாம் ஐஸ்வர்யா மீண்டும் தமிழில் நடிக்கப்போகிறாரா, அல்லது வாய்ப்பை நழுவவிடப் போகிறாரா என்று.
Post a Comment