வரும் ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 26) என்னுள்ளில் எம்எஸ்வி என்ற தலைப்பில் இளையராஜா நடத்தும் சிறப்பு இசை நிகழ்ச்சிக்கான டிக்கெட்டுகள் கிடைக்கும் இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் மறைந்ததை ஒட்டி அவர்து பாடல்களை இளையராஜா வரும் இருபத்தியேழாம் தேதி காமராஜர் அரங்கத்தில் நடத்த இருக்கிறார்.
ஜீவா - இளையராஜா கல்வி அறக்கட்டளை சார்பாக நடத்தப்படும் இந்த நிகழ்ச்சிக்கான நன்கொடை ரசீதுகள் http://eventjini.com/ennullilmsv என்ற இணையத்தில் கிடைக்கும்.
7887402888 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு பதிவு செய்தும் டிக்கெட் பெறலாம். நாளை இந்த நன்கொடை ரசீதுகள் கிடைக்கும் இடங்களை அதிகப்படுத்த இருக்கிறர்கள்.
"இசையில் ஒவ்வொருவருடைய கற்பனையும் ஒவ்வொரு மாதிரியாக இருக்கும். நம்மை உயிரை எங்கோ அழைத்துசெல்லுகின்ற உணர்வைக் கொண்டுவருவது அவ்வளவு சதாரணமான விஷயம் அல்ல. இதை நான் நன்றாக அறிந்திருக்கிறேன். இதை மக்களுக்கு அறிவிக்க வேண்டும் என்பதால் இந்த நிகழ்ச்சியை நடத்துகிறேன்.
அண்ணன் எம்எஸ்வி உடலை விட்டு உயிர் பிரிந்து சென்றாலும் அவர் என்றும் மறையாத நித்ய சொரூபர். எம்.எஸ்.வி.யின் இசைத் திறமையை வெளிப்படுத்தும் விதமாக இந்த நிகழ்ச்சி இருக்கும்," என இந்த நிகழ்ச்சி குறித்து ஏற்கெனவே இளையராஜா விளக்கம் அளித்திருப்பது நினைவிக்கலாம்.
Post a Comment