‘வெண்ணிலா கபடிக்குழு' படம் மூலம் நடிகராக அறிமுகமான விஷ்ணு, ரஜினிகாந்தின் நண்பர் இயக்குநர் நடராஜின் மருமகன். பிரபல போலீஸ் அதிகாரி ரமேஷ் குடவாலாவின் மகன்.
முதல் படம் தந்த வெற்றி, அடுத்த இரு படங்களில் தொடரவில்லை. ஆனால் அடுத்தடுத்து வந்த குள்ளநரிக் கூட்டம், ‘முண்டாசுப்பட்டி', ‘ஜீவா', ‘இன்று நேற்று நாளை' படங்களின் வெற்றி, அவரை முன்னணி நாயகனாக்கியிருக்கிரது.
நேற்று தனது பிறந்த நாளைக் கொண்டாடிய விஷ்ணு, செய்தியாளர்களைச் சந்தித்தார்.
விஷ்ணு எப்படி விஷ்ணு விஷால் ஆனார்?
அவர் கூறுகையில், "என்னுடைய இயற்பெயர் விஷால். நான் சினிமாவில் வரும்போது, விஷால் பெரிய நடிகர். இதனால் என் பெயரை மாற்ற வேண்டும் என்று நினைத்தேன். அதனால் விஷ்ணு என்று மாற்றிக் கொண்டேன்.
விஷால் கோவிச்சிக்க மாட்டார்
என்னுடைய இயற்பெயரும் இணைந்திருந்தால் நன்றாக இருக்கும் என்று எண்ணினேன். அதனால் விஷாலும் கோபித்துக் கொள்ளமாட்டார் என்பதால் என் பெயரை விஷ்ணு விஷால் என்று தற்போது மாற்றிக் கொண்டுள்ளேன். இதற்காக விஷால் கோபித்துக் கொள்ள மாட்டார்.
அண்ணன் மாதிரி
விஷால் என்னுடைய அண்ணன் மாதிரி. எனக்கு ஒரு பிரச்சனை வந்தால் முதலில் உதவி செய்யும் அளவிற்கு என்னுடன் பழகி வருகிறார்.
நன்றி
எனக்கு வாய்ப்பு கொடுத்த இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்களுக்கு இந்த சமயத்தில் நன்றி சொல்லிக் கொள்கிறேன். எனது நண்பர்களான விஷால், ஆர்யா, விக்ராந்த், உதயநிதி ஆகியோர் எனக்கு தக்க சமயத்தில் நல்ல உதவி செய்திருக்கிறார்கள். அவர்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்," என்றார்.
Post a Comment