பாகுபலி படத்தைப் பார்த்த ஏ ஆர் ரஹ்மான், அந்தப் படத்தை வியந்து பாராட்டியுள்ளார்.
பாகுபலி பார்த்த பிரபலங்கள் பலரும் வியந்து பாராட்டி வருகின்றனர்.
இந்த நிலையில் ஆஸ்கார் நாயகன் ஏஆர் ரஹ்மான் சென்னை சத்யம் திரையரங்கில் பாகுபலியை பார்த்துள்ளார்.
படம் பார்த்த அனுபவம் குறித்து அவர் கூறுகையில், "லைஃப் ஆப் பை படத்துக்குப் பிறகு என்னைக் கவர்ந்த இந்திய திரைக்காவியம் என்றால் அது பாகுபலிதான். படம் பார்த்துவிட்டு நல்ல உணர்வுடன் திரும்பினேன். ஆம்.. நம்மால் இதையும் செய்ய முடியும்... இதற்கு மேலும் செய்ய முடியும்," என்றார்.
படத்தைப் பாராட்டி சமூக வலைத் தளங்களிலும் எழுதியுள்ளார் ரஹ்மான்.
அமெரிக்கா உள்ளிட்ட வெளிநாடுகளில் இன்னும் கூட பாகுபலிக்கு ரசிகர் கூட்டம் குறையவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Post a Comment