ராமேஸ்வரம்: மறைந்த மக்கள் ஜனாதிபதி அப்துல்கலாமின் எளிமை மற்றும் அவரது கொள்கைகளைப் பின்பற்றி வருவதாக நடிகர் சிவகார்த்திக்கேயன் தெரிவித்துள்ளார்.
இந்தியா மட்டுமின்றி உலகத்தின் பல்வேறு பகுதிகளில் வாழும் இந்தியர்களால் மக்கள் ஜனாதிபதியாக ஏற்றுக் கொள்ளப் பட்ட அப்துல் கலாம், கடந்த 27ம் தேதி மாரடைப்பால் காலமானார்.
அவரது திடீர் மரணம் இந்தியர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. ராமேஸ்வரத்தில் இன்று அவரது இறுதிச் சடங்குகள் நடைபெறுகின்றன. அப்துல்கலாமின் உடலுக்கு மாணவர்கள், பொதுமக்கள் மற்றும் தலைவர்கள் நேரில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
அந்த வகையில், நடிகர் சிவகார்த்திக்கேயனும் ராமேஸ்வரம் சென்று கலாமுக்கு நேரில் அஞ்சலி செலுத்தினார். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்கள் மத்தியில் அவர் கூறியதாவது:-
அப்துல்கலாமின் எளிமை மற்றும் கொள்கையை பின்பற்றி வருகிறேன். பள்ளி,கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள் சார்பில் இங்கு கலாமின் உடலுக்கு அஞ்சலி செலுத்த வந்துள்ளேன். அவரது கனவை நினைவாக்க அனைவரும் உறுதி ஏற்போம்' என்றார்.
Post a Comment