வீட்டிலேயே இறைவனை தரிசிக்க தினமொரு திவ்ய தேசம்

|

ஸ்ரீ சங்கரா தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் புதிய நிகழ்ச்சி "தினமொரு திவ்ய தேசம்". இந்நிகழ்ச்சி திங்கள் முதல் வெள்ளி வரை காலை 7.00 மணிக்கு ஒளிபரப்பாகிறது.

Dinam Oru Divya Desam on Sri Sankara TV

கோவிலுக்கு செல்வது வழக்கத்தில் இருந்தாலும் பலர் தாங்கள் அன்றாடம் செல்லும் அக்கோவிலின் வரலாறு மற்றும் அதன் பெருமை பற்றி அறிந்திருக்க மாட்டர். ஆனால் அது பற்றிய விவரங்களை அறியும்போது அவர்கள் கோவிலுக்கு செல்வதன் காரணத்தையும் உணர்கிண்றனர். ஒரு சிரிய ஊரிலுள்ள கோவிலுக்குக் கூட அதற்கென்ற தனிச்சிறப்பும் வரலாறும் உண்டு.

Dinam Oru Divya Desam on Sri Sankara TV

எடுத்துக்காட்டாக நைமிஷாரண்யம் என்ற க்ஷேத்திரத்தை எடுத்துக்கொண்டால் "நைமி" என்ற சொல்லுக்கு வடமொழியில் வட்டம் என்று பொருள். அதாவது தேவர்கள் யாகம் நடத்த உகந்த இடம் எது என்று பிரம்மனிடம் கேட்டபோது பரம்மன் தனது வட்டமான மோதிரத்தை கழற்றி பூமியில் வீச அம்மோதிரம் விழுந்த இடமே "நைமிக்ஷாரண்யம்" என்னும் க்ஷேத்திரமாகும். விஷ்ணு தனது சுதர்ஷன சக்கரத்தால் அரக்கர்களை கொன்ற இடமும் இந்த நைமிக்ஷாரண்யமாகும் என மற்றொரு வரலாறும் உள்ளது.

Dinam Oru Divya Desam on Sri Sankara TV

இது போன்ற பல அரிய தகவல்களை நேயர்களுக்கு வழங்கும் முயற்சியில் உருவாக்கப்பட்ட நிகழ்ச்சி தான் "தினமொரு திவ்ய தேசம்". ஸ்ரீ அனந்த பத்மநாபாச்சார் அவர்களின் சொற்பொழிவுடன் கூடிய இந்நிகழ்ச்சியில் தென் இந்தியாவின் பல கோவில்களின் பெருமைகளை நேயர்கள் அறியலாம். ஸ்ரீ சங்கரா தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை காலை 7.00 மணிக்கு ஒளிபரப்பாகிறது.

 

Post a Comment