மறக்க முடியாத மெல்லிசை.. உயிருக்குள் ஊடுறுவிய எம்.எஸ்.வி

|

சென்னை: எத்தனை எத்தனை பாடல்கள்.. எத்தனை உயிரோட்டமான பாடல்கள்.. எண்ணி முடியாது எம்.எஸ்.வியின் பெருமைகளை எடுத்து வைத்தால். ஜாம்பவான்கள் முதல் சாதாரணர்கள் வரை இவருக்குத்தான் எத்தனை எத்தனை ரசிகர்கள்.

கண்ணதாசனும், இந்த மெல்லிசை மன்னரும் சேர்ந்து விட்டால், அங்கு தமிழ் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும், இசை மழை பொழியும்..

குறிஞ்சி மலர் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை பூக்கும்.. ஆனால் இந்த மெல்லிசை மலர் நமது வாழ்க்கையில் ஒருமுறைதான் பூக்கும்.. ஆனால் பல தலைமுறைகளுக்கும் இதன் வாசம் தொடரும்...

எம்.ஜி.ஆருக்கென்று இவர் தொடுத்து வைத்த பாடல்கள் எத்தனை.. தத்துவம், சோகம், வீரம்.. ஆனால் இந்தத் தாலாட்டுக்கு மயங்காதவர்கள் யாரேனும் உண்டா?

நடிகர் திலகத்தின் உடல் முழுவதும் நடிப்பு என்றால், எம்.எஸ்.வியின் காதல் பாடல்களில் எந்த இடத்தைத் தொட்டாலும் துடிப்புதான்.. இசையில் துடித்த காதல்.. பாடர்களின் இதழ் வழியாக நமது காதுகளுக்குள் பாயும்போது ஏற்படும் சிலிர்ப்பு... சொல்ல முடியாது.. அனுபவியுங்கள்

இந்தப் பாட்டைக் கேளுங்கள்.. எத்தனை எத்தனை முத்துக்கள்... பாடலை ரசிப்பதா, நடிகர்களை ரசிப்பதா, இசையை ருசிப்பதா.. எம்.எஸ்.வி - கே.பி. - கமல் மாஸ்டர்பீஸின் பெஸ்ட் பீஸ் இது.

மாற்றம் ஒன்றே மாறாதது என்பார்கள்.. அதை எம்.எஸ்.வி. எவ்வளவு அழகாக பிடித்திருக்கிறார் என்பதற்கு பில்லா ஒரு உதாரணம். பலருக்கும் இது எம்.எஸ்.வி பாட்டா என்று கேட்கத் தோன்றும். அப்படி ஒரு அதிரடி மாற்றத்தை பில்லா பாடல்களில் காட்டியிருப்பார் எம்.எஸ்.வி.

எத்தனைப் பாடல்களைக் கேட்டாலும், இந்தப் பாடலைக் கேட்டு அழாத உள்ளம் இருக்க முடியாது.. டி.கே.ராமமூர்த்தியுடன் இணைந்து அவர் படைத்த அற்புத விருந்து இது...

எல்லாவற்றையும் கொடுத்து விட்டு போய் விட்டார் எம்.எஸ்.வி.. மறக்க முடியாத கனத்த நினைவுகளை நம்மிடம் விட்டு விட்டு.

 

Post a Comment