சென்னை: பாபநாசம் படம் மூலம் பல காலம் கழித்து பெரிய திரைக்கு வந்த தன்னை ஏற்றுக் கொண்ட ரசிகர்களுக்கு கௌதமி தனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துள்ளார்.
பலகாலம் பெரிய திரை பக்கமே வராமல் இருந்தார் கௌதமி. இந்நிலையில் தான் அவர் உலக நாயகன் கமல் ஹாஸன் கை பிடித்து பாபநாசம் படம் மூலம் மீண்டும் பெரிய திரையில் பிரவேசம் செய்தார். அவர் கமலுடன் ஜோடி சேர்ந்த பாபநாசம் படம் சூப்பர் ஹிட்டாகியுள்ளது.
இதனால் கமல், கௌதமி உள்ளிட்ட படக்குழுவினர் மகிழ்ச்சியில் உள்ளனர். படத்தை வெற்றிப்படமாக்கியதற்காக அவர்கள் ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளனர். இந்நிலையில் கௌதமி படம் பற்றி கூறுகையில்,
எங்கள் படத்தை இவ்வளவு பெரிய அருமையான வெற்றியாக்கியதற்கு நன்றி சொல்ல வந்துள்ளோம். அதையும் மீறி தனிப்பட்ட முறையில் நான் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். இத்தனை ஆண்டுகளுக்கு பிறகு நான் நடிக்க வந்துள்ள நிலையில் இவ்வளவு அன்பான, அருமையான, அழகான வரவேற்பு அளித்த ரசிகர்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றி.
நான் மீண்டும் நடிக்க வந்த படம் அருமையாக அமைந்ததில் மகிழ்ச்சி. அனைவருக்கும் என் நன்றி என்றார்.
Post a Comment