ரஜினியிடமிருந்து அழைப்பு... அதிர்ந்த மலையாளப் பட இயக்குநர்!

|

பொதுவாகவே தமிழ் திரைத்துறையில் இருக்கும் இயக்குநர்கள், நடிகர்களுக்கு ரஜினியுடன் இணையும் ஆர்வம் ஏகத்துக்கும் உண்டு. அவரிடமிருந்து அழைப்பு வராதா எனக் காத்திருப்பார்கள்.

அட்டகத்தி, மெட்ராஸ் என்ற இரண்டே படங்கள் இயக்கி, வளரும் இயக்குநராக இருந்த ரஞ்சித், ரஜினியிடமிருந்த வந்த ஒரு அழைப்பில் இன்று முதல் நிலை இயக்குநராகிவிட்டார்.

Alphones Puthiran gets a call from Rajini, But...

இதேபோன்ற ஒரு அழைப்பு, இன்னொரு வளரும் இயக்குநருக்கு ரஜினியிடமிருந்து வந்தது. ஆனால் அவரோ ரஜினியைச் சந்திக்க தயங்கிக் கொண்டிருக்கிறார் இன்னமும்.

இந்த இயக்குநரின் பெயர் அல்போன்ஸ் புத்திரன். கேரளாவின் சென்சேஷனல் இயக்குநர். பிரேமம் படத்தை இயக்கியவர்.

தமிழில் இவர் இயக்கிய படம்தான் நேரம்.

பிரேமம் படம் பார்த்த ரஜினிகாந்த், அல்போன்ஸ் புத்திரனிடம் கதை கேட்க அழைப்பு விடுத்துள்ளார். அதிர்ந்து போன அல்போன்ஸ், "ரஜினி மிகப் பெரிய நடிகர். அவருக்கு படம் பண்ணும் அளவுக்கு என் அனுபவமில்லை. அவ்வளவு பட்ஜெட்டை கையாளும் திறன் எனக்கு இருக்கிறதா என்றும் தெரியவில்லை. எனவேதான் அவரைச் சந்திக்க தயங்கிக் கொண்டிருக்கிறேன். ஆனால் அவரைப் போன்ற ஒரு சாதனையாளரிடமிருந்து எனக்கு அழைப்பு வந்ததே மிகப் பெரிய அங்கீகாரம்தான்," என்கிறார்.

 

Post a Comment