சென்னை: மக்களின் ஜனாதிபதி அப்துல்கலாமின் உடல் இன்று பகல் 11 மணிக்கு மேல் அவரின் சொந்த மண்ணில் நல்லடக்கம் செய்யப்பட்டது, லட்சக்கணக்கான மக்கள் அவரது இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினர்.
இந்தியா முழுவதுமிருந்து பல்வேறு தலைவர்கள், பள்ளி மாணவர்கள் ஆகியோர் மக்களின் ஜனாதிபதிக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர், நடிகர்களில் விஜயகாந்த், சிவகார்த்திகேயன் மற்றும் வடிவேலு ஆகியோரும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர்.
அப்துல்கலாமின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய பின்னர் நிருபர்களிடம் பேசிய நடிகர் வடிவேலு அப்துல்கலாமைப் பற்றி பேசினார் " உலகத்தின் அனைத்து வல்லரசு நாடுகளையும், சர்வசாதாரணமாக பெயர் வைக்கப்படாத வல்லரசு நாடு இந்தியா என பீதியைக் கிளப்பி, இந்தியாவை தலைநிமிரச் செய்து தமிழன். அனைவருக்கும் பெருமையைச் சேர்த்த தமிழ் தங்கம் ஒரு மாபெரும் விஞ்ஞானி, இளைஞர்களுக்கேல்லாம் அவர் ஒரு கல்வி விளக்கு.
ஐயா ,அப்துல்கலாம் பிரிந்த நாள் நமக்கெல்லாம் ஒரு கருப்பு தினம். இந்தியாவின் ஒவ்வொரு வீட்டிலும் அவர்களது உறவுக்காரர் இறந்தது போல் உணர்கிறேன் நான், அவர் நம்மை விட்டு பிரிந்தது மிகப்பெரிய வேதனை.
அவர்போலவே ஒவ்வொரு இளைஞர்களும், மாணவர்களும் ஒவ்வொரு அப்துல் கலாமாக மாறவேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்" என தனது வருத்தத்தைப் பதிவு செய்திருக்கிறார்.
Post a Comment