பெங்களூர்: 1995 ம் ஆண்டில் கன்னட நடிகர் சிவராஜ்குமார் - பிரேமா நடிப்பில் வெளியான திரைப்படம் ஓம், சாண்டல்வுட்டின் பவர்புல்லான நடிகரும் இயக்குனருமான உபேந்திரா இந்தப் படத்தை இயக்கியிருந்தார்.
படம் வெளியாகி இந்த 2015 ம் ஆண்டில் 20 வருடங்களைத் தொட்டு இருக்கிறது ஆனால் ஆச்சரியப்படும் விதமாக இந்தப் படத்தின் சாட்டிலைட் உரிமை இதுவரைக்கும் யாருக்கும் விற்கப் படாமலே இருந்தது.
எத்தனையோ பேர் முட்டி மோதியும் பலன் இல்லாததால் வெறுத்துப் போய் இந்தப் படத்தை வாங்கும் உரிமையை கைவிட்டு விட்டனர், ஆனால் அனைவரும் ஆச்சரியப்படும் விதமாக இந்தப் படத்தின் சாட்டிலைட் உரிமை தற்போது சுமார் 10 கோடி ரூபாய்க்கு விலை போயிருக்கிறது.
இந்த 20 வருடங்களில் இதுவரை சுமார் 632 முறை ரசிகர்கள் கண்டுகளித்த இந்தப் படத்தின் சாட்டிலைட் உரிமையை பிரபல கன்னட சேனல் ஒன்று 10 கோடியை கொட்டிக் கொடுத்து வாங்கியிருக்கிறது என்று தகவல்கள் கூறுகின்றன.
ரசிகர்களின் தணியாத ஆர்வத்தால் 10 கோடிக்கு விலைபோயிருக்கும் ஓம் திரைப்படத்தின் தயாரிப்புத் தொகை, இந்த சாட்டிலைட் உரிமையில் நான்கில் இல்லை இல்லை ஐந்தில் ஒரு பங்கு கூட ஆகியிருக்காது.
என்னத்தைச் சொல்லுவது உபேந்திராவின் அதிர்ஷ்டம் அப்படி...
Post a Comment