நடிகர் விஷாலை வைத்து இயக்குநர் முத்தையா உருவாக்கும் புதிய படத்துக்கு மருது என தலைப்பிட்டுள்ளனர்.
குட்டிப்புலி, கொம்பன் போன்ற படங்களை இயக்கியவர் முத்தையா. இப்போது பாயும் புலி படத்தில் நடித்து வரும் விஷால், அடுத்து பாண்டிராஜ் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
அத்துடன் முத்தையா இயக்கத்திலும் நடிக்கிறார். பாண்டிராஜ், முத்தையா இருவர் படங்களும் ஒரே நேரத்தில் நடக்கவிருக்கின்றன.
முத்தையா இயக்கும் படத்துக்கு மருது என்று தலைப்பிட்டுள்ளனர். மதுரையைக் கதைக் களமாகக் கொண்டு உருவாகும் இந்தப் படத்தை பிரபல சினிமா பைனான்சியரும் விநியோகஸ்தருமான மதுரை அன்பு தயாரிக்கிறார்.
இந்தப் படத்தின் தொழில்நுட்பக் கலைஞர்கள், நடிகர் நடிகைகள் பற்றிய தகவல்கள் விரைவில் வெளியாகவிருக்கின்றன.
Post a Comment