இயற்கை விவசாயம்: கல்லூரி மாணவர்களுக்கு உதவி செய்த ராகவா லாரன்ஸ்

|

சென்னை: சில நாட்களுக்கு முன்பு 100 ஏழை மாணவர்களின் கல்விக்கு ரூபாய் 1 கோடி கொடுத்து உதவி செய்த ராகவா லாரன்ஸ், தற்போது கல்லூரி மாணவர்களுக்கு மற்றுமொரு உதவியை செய்திருக்கிறார்.

சென்னை அண்ணா பல்கலை மாணவர்கள் ஒன்றிணைந்து இயற்கை விவசாயம் செய்ய முடிவு செய்தனர், இதற்காக சென்னை கிண்டியில் உள்ள கல்லூரி வளாகத்தில் 1 ஏக்கர் நிலத்தை தேர்வு செய்து விவசாயம் செய்ய உள்ளனர்.

Natural Forming: Raghava Lawarence Helped Students

இதனை அறிந்த ராகவா லாரன்ஸ் அந்த மாணவர்களின் திட்டம் நிறைவேற சுமார் 2,50,000 ரூபாயை வழங்கி இருக்கிறார், விவசாயம் அழிந்து வரும் நிலையில் மாணவர்கள் அதனைக் கையிலெடுத்திருப்பதும் அவர்களை ஊக்குவிக்கும் வகையில் லாரன்ஸ் பண உதவி செய்திருப்பதும் உண்மையில் பாராட்டப்படவேண்டிய விஷயங்களே.

இயற்கை விவசாயத்திற்கான ஆரம்பப் பணிகளை மாணவர்கள் ஆரம்பித்து உள்ளனர், விரைவில் முழு வேகத்தில் விவசாயம் தொடங்கப் படவுள்ளது.

லாரன்சின் உருவம் கருப்பாக இருந்தாலும் உள்ளம் தும்பைப்பூ போன்றது என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்து விட்டார்.

 

Post a Comment