படுத்துக் கிடக்கும் மார்க்கெட்டை தூக்கி நிறுத்த விரும்பும் நயன்தாரா... டோலிவுட்டில்

|

சென்னை: டோலிவுட்டில் மீண்டும் முன்னணி நடிகையாக வேண்டும் என்று விரும்புகிறாராம் நயன்தாரா.

கோலிவுட்டின் முன்னணி நடிகையாக உள்ளவர் நயன்தாரா. தெலுங்கு திரை உலகிலும் ஒரு காலத்தில் நயன்தாரா முன்னணி நடிகையாக இருந்தார். ஆனால் தற்போது டோலிவுட்டில் அவரது மார்க்கெட் நிலைமை சரியில்லை.

Nayanthara tries to revive her career in Tollywood

தெலுங்கு படங்களில் நடிக்க அவருக்கு வாய்ப்புகள் கிடைக்க மாட்டேன் என்கிறது. இந்நிலையில் அவர் வெங்கடேஷ் ஜோடியாக நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார். கிராந்தி மாதவ் இயக்கும் இந்த படம் காதலை அடிப்படையாகக் கொண்டது.

இந்த படம் தெலுங்கில் படுத்துக் கிடக்கும் தனது மார்க்கெட் தூக்கி நிறுத்தும் என்று நம்புகிறார் நயன்தாரா. இந்த படம் கைகொடுத்தால் கோலிவுட்டை போன்றே டோலிவுட்டிலும் ராணியாக வலம் வர விரும்புகிறார் அவர்.

நயன்தாரா 4 தமிழ் படங்களில் நடித்து முடித்துள்ளார், இரண்டு படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

 

Post a Comment