மீண்டும் இளையராஜாவுடன் கை கோர்க்கிறார்கள் மோகன் லாலும் இயக்குநர் ப்ரியதர்ஷனும்.
இந்தப் படம் சர்வதேசப் படமாக, பல மொழிகளிலும் உருவாகிறது.
கோபுர வாசலிலே, காலாபானி (சிறைச்சாலை), குரு போன்ற படங்களில் இளையராஜாவும் ப்ரியதர்ஷனும் மோகன்லாலும் இணைந்து பணியாற்றினர்.
ப்ரியதர்ஷன் அடுத்து மோகன் லாலை வைத்து புதிய படம் இயக்குகிறார். சர்வதேசப் படமாக உருவாகும் இந்தப் படம் தமிழ், மலையாளம், இந்தி, ஆங்கிலம், சீன மொழிகளில் தயாராகிறது.
இந்தப் படத்துக்கு இளையராஜா இசையமைக்கிறார்.
சமீபத்தில் பிரசாத் ஸ்டுடியோவில் இளையராஜாவைச் சந்தித்த ப்ரியதர்ஷன் இந்தப் படம் குறித்து பேச்சு நடத்தினார். கதையைக் கேட்ட இளையராஜா இசையமைக்க சம்மதம் தெரிவித்தார்.
இந்தப் படம் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகவிருக்கிறது.
Post a Comment