கேஎஸ் ரவிக்குமார் என்றாலே பிரமாண்டம், பெரிய ஆர்டிஸ்ட், டெக்னீஷியன்கள்தான் நினைவுக்கு வரும். ஆனால் லிங்காவுக்குப் பிறகு அவர் உருவாக்கும் புதிய படம் சிம்பிளாக தயாராகிறது.
கன்னடத்தில் முன்னணி ஹீரோவாக இருந்தாலும், தமிழைப் பொறுத்தவரை இன்னும் ஆரம்ப நிலையில்தான் இருக்கிறார் சுதீப். அவரைத்தான் நாயகனாக வைத்து தன் அடுத்த படத்தைத் தொடங்குகிறார் கேஎஸ்ஆர்.
நெடு நெடு உயரம் கொண்ட சுதீப்புக்கு இந்தப் படத்தில் ஜோடி 'குள்ள' நித்யா மேனன். தமிழ், கன்னடம் என இரு மொழிகளில் தயாராகிறது இந்தப் படம்.
இதுபற்றி சுதீப் கூறும்போது, "கே.எஸ். ரவிக்குமாரின் சமீபத்திய படங்கள் சரியாகப் போகாததால் அவருடைய திறமை குறைந்துவிடாது. இந்தப் படம் கமர்ஷியல் அம்சங்கள் கொண்டது. இதுபோன்ற படங்களை எடுப்பதில் அவர் திறமைசாலி," என்றார்.
ஆகஸ்ட் 10-ம் தேதி படப்பிடிப்பு தொடங்குகிறது.
Post a Comment