சென்னை: இயக்குநர் ரஞ்சித் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினி நடிக்க இருக்கும் கபாலி படத்தின் போட்டோ ஷூட், சமீபத்தில் பழமை வாய்ந்த ஏவிஎம் அரங்கத்தில் நடைபெற்றது.
இந்த போட்டோ ஷூட்டை மிகவும் ரகசியமாக படப்பிடிப்புக் குழுவினர் நடத்தினர், தற்போது அந்த போட்டோ ஷூட்டைப் பற்றி சில தகவல்கள் வெளியாகியுள்ளன.
கபாலி படத்தில் ரஜினி தாதாவாக நடிக்கிறார். அவரின் மனைவியாக ராதிகா ஆப்தேவும், மகளாக தன்ஷிகாவும் படத்தில் நடிக்க இருக்கின்றனர்.
கபாலி போட்டோ ஷூட்டை கொரியன் புகைப்படக்காரரைக் கொண்டு எடுத்து இருக்கின்றனர், இந்த போட்டோ ஷூட்டில் ரஜினிக்கு மேக்-அப் செய்வதற்காக பாலிவுட்டில் இருந்து பிரபல ஒப்பனைக் கலைஞரான பானு பாஷ்யத்தை வரவழைத்து இருக்கின்றனர்.
பானு பாஷ்யம் ரஜினியின் தோற்றத்தை தர்மதுரையில் பார்த்தது போன்று மிகவும் இளமையாக மாற்றியிருக்கிறார் என்று கூறுகின்றனர்.
தலை மற்றும் முகத்தில் லேசான நரை முடிகள் இருப்பது போன்று இந்தப் போட்டோ ஷூட் நடத்தப்பட்டு இருக்கிறது, மேலும் ரஜினியை வைத்து தனியாகவும் நிறைய புகைப்படங்களை எடுத்து இருக்கின்றனர்.
1980களில் வாழ்ந்த பெண்களை பிரதிபலிக்கும் விதத்தில் ராதிகா ஆப்தே சேலை கட்டி இருக்க, சிறுவயது தன்ஷிகாவுடன் ரஜினி நிற்பது போன்ற சில புகைப்படங்களையும் எடுத்து இருக்கின்றனர்.
இவற்றையெல்லாம் வைத்துப் பார்க்கும் போது வயதான தாதாவாக மகள் மற்றும் மனைவியுடன், கபாலியில் ரஜினி களமிறங்குகிறார் என்று உறுதியாகத் தெரிய வந்துள்ளது.
செப்டம்பர் 2 வது வாரத்தில் கபாலி படத்தின் படப்பிடிப்பு தொடங்க இருப்பதாக படப்பிடிப்புக் குழுவினர் கூறியுள்ளனர், எனினும் கபாலி பற்றி உறுதியான தகவல்கள் வெளியாகும் வரை வழக்கம் போல நாம் காத்திருக்கலாம்.
Post a Comment