தமிழ் சினிமாவில் அடிக்கடி கோர்ட் படியேறும் அமைப்பு அநேகமாக தயாரிப்பாளர் சங்கம்தான். இப்போது, இயக்குநர் சங்கம் நீதிமன்றப் படிகளில் ஏற ஆரம்பித்துள்ளது.
விஷயம் இதுதான்... தமிழ் சினிமா இயக்குநர் சங்கத்தில் "தலைவர்" அல்லது "செயலாளர்" பதவிக்கு போட்டியிட குறைந்தது 5 படம் இயக்கி இருக்க வேண்டும் என்றும் 10 வருடம் சந்தா செலுத்தி இருக்க வேண்டும் என்றும் புதிய விதிமுறை கொண்டு வரபட்டுள்ளதாம்.
இதனை எதிர்த்து முரளி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
அந்த வழக்கு இன்று 15 ஆவது கோர்ட்டில் விசாரிக்கப்படுகிறது. அதற்கு இயக்குநர் சங்க தலைவர் திரு.விக்ரமன் அவர்கள் ஆஜர் ஆவதாக தெரியவந்துள்ளது.
இயக்குநர் அமீர் போன்றவர்களே 4 படம் மட்டுமே இயக்கி இருப்பது குறிப்பிடத்தக்கது..
Post a Comment