வெள்ளி விழா வசந்த்தின்... மீண்டும் கேளடி கண்மணி!

|

சென்னை: எஸ்.பி.பாலசுப்ரமணியம் - ராதிகா நடிப்பில் 1990 ம் ஆண்டு வெளிவந்து மாபெரும் ஹிட்டடித்த திரைப்படம் கேளடி கண்மணி.

படம் வெளிவந்து 25 வருடங்கள் கடந்த நிலையில் தற்போது அந்தப் படத்தை ரீமேக்கும் முயற்சியில் இறங்கியிருக்கிறார் இயக்குநர் வசந்த்.

Director Vasanth Will Remake in Keladi Kanmani

90களில் அன்றைய இளம் கதாநாயகர்களை வைத்து படமாக்காமல் நடுத்தர வயதினரை வைத்து வித்தியாசமான திரைக்கதை அமைத்திருந்தார் வசந்த். படம் ஹிட்டானது மட்டுமில்லாமல் சுமார் 285 நாட்களைக் கடந்து அனைத்து திரையரங்குகளிலும் வெற்றிவாகை சூடியது.

தற்போது இப்படத்தை ரீமேக் செய்யும் முயற்சியில் இருக்கிறாராம் இயக்குனர் வசந்த். சமீபத்தில் இவர் அளித்த பேட்டியில், ‘பழைய படங்களை தற்போது ரீமேக் செய்யும் காலம் வந்துவிட்டது. அப்படி நான் ரீமேக் செய்ய நினைத்தால் ‘கேளடி கண்மணி' படத்தை ரீமேக் செய்வேன்.

ஆனால் இந்த படத்தில் சீனியர் நடிகர்களை வைத்து இயக்க மாட்டேன். இன்றைய கால கட்டத்தில் உள்ள இளம் ஜோடிகளை தேர்வு செய்து நடிக்க வைப்பேன். மேலும் திரைக்கதையில் சில மாற்றங்களை செய்து புதிய பரிமாணத்தில் இயக்குவேன்' என்று கூறியிருக்கிறார்.

தற்போது இயக்குனர் வசந்த் ‘சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்' படத்தை இயக்கி வருகிறார், இப்படத்தின் படப்பிடிப்பு தொடர்ந்து நடந்து வருகிறது. இப்படம் வெளியான பிறகு ‘கேளடி கண்மணி' படத்தை ரீமேக் செய்வார் என்று கூறுகின்றனர்.

வசந்தின் கேளடி கண்மணி விரைவில் உங்கள் அபிமானத் திரையரங்குகளில்.

 

Post a Comment