சென்னை: சூர்யாவின் கைவசம் தற்போது அரைடஜன் படங்கள் இருந்தாலும் சாரின் மார்க்கெட் சர்ரென்று இறங்கிக் கிடக்கிறது தமிழ்நாட்டில், இதனால் எப்படியும் தனது மார்க்கெட்டை முன்னணிக்கு கொண்டுவரும் நோக்கத்தில் இருக்கிறார் சூர்யா.
தொடர்ந்து நல்ல பையனாக நடித்து வரும் சூர்யா இனிமேல் எல்லாம் கலந்த கேரக்டர்களில், நடித்தால் மட்டுமே மார்க்கெட்டில் தாக்குப் பிடிக்கலாம் என்று நினைக்கத் தொடங்கி விட்டார்.
தற்போது விக்ரம்குமாரின் 24 படத்தை முடித்திருக்கும் சூர்யா அடுத்து ஹரியின் இயக்கத்தில் சிங்கம் 3 யில் களமாட இருக்கிறார். இந்த 2 படங்களையும் முடித்து விட்டு அடுத்தடுத்து முன்னணி இயக்குனர்களின் படங்களில் நடிக்க இருக்கிறார் சூர்யா.
தற்போது புதிதாக தன்னிடம் கதை சொல்ல வரும் இயக்குனர்களிடம் நெகட்டிவ் ரோல்களில் தனக்கு ஏற்பட்டிருக்கும் ஆர்வத்தை எடுத்துக் கூறி, நெகட்டிவ் கதைகளில் தான் நடிக்கத் தயார் என்று இயக்குனர்களிடம் தனது ஆசையை வெளிபடுத்தியிருக்கிறார்.
குறிப்பாக நடிகர் சத்யராஜ் ஏற்று நடித்த மாதிரியான கேரக்டர்களில் நடிக்க ஆசை கொண்டிருக்கிறார் என்று தகவல் அறிந்தவர்கள் கூறுகின்றனர்.
Post a Comment