எல்லாம் முடிஞ்சு போச்சு.. ஆனாலும் ஒரு பயம்...!

|

சென்னை: பல்வேறு பிரச்சினைகளை சந்தித்து பலவருட போராட்டத்திற்குப் பின் வெளிவர இருக்கிறது விரல் நடிகரின் படம், கடந்த முறை எல்லாம் முடிந்து படம் வெளியிட சில நாட்கள் மட்டுமே இருந்த நிலையில் உள்ளே புகுந்த நிறுவனம் பயங்கர பிரச்சினையை உண்டு பண்ணி படத்தை வெளியிட முடியாமல் செய்து விட்டது.

படம் மீண்டும் பெட்டிக்குள் முடங்கி விடுமோ என்று எண்ணிய போது தளபதியான அந்த மூன்றெழுத்து நடிகர் வந்து பிரச்சினையை தீர்த்து வைத்தார், படத்தின் மீது உள்ள வழக்குகள் அனைத்தும் முடிந்து தற்போது முழு வேகத்துடன் படம் வெளியீட்டிற்குத் தயாராகி வருகிறது.

விளம்பரங்களை விறுவிறுப்பாக வெளியிட்டு வரும் படக்குழுவினருக்கு சந்தோஷம் ஒருபுறம் இருந்தாலும், மற்றொரு பக்கம் சிறிய பயம் ஒன்றும் மனதிற்குள் எட்டிப் பார்க்கிறதாம்.

வேறு ஒன்றுமில்லை இந்த முறையாவது படம் வெளியாகுமா? அல்லது மீண்டும் ஏதேனும் பிரச்சினையில் சிக்கிக் கொள்ளுமா, என்ற பயம் தற்போது படக்குழுவினரின் மனதில் பூகம்பத்தை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறதாம்.

படம் வெளியாகற வரைக்கும் உள்ளுக்குள்ள இந்த மாதிரி பயமெல்லாம் இருக்கத்தான் செய்யும் என்ன செய்யுறது...

 

Post a Comment