என் திருமணத்தை கடவுளிடம் விட்டுவிட்டேன். அவரக் பார்த்துக் கொள்வார் என்று நடிகர் சிம்பு கூறினார்.
நீண்ட இடைவேளைக்குப் பிறகு சிம்பு நடிப்பில் தற்போது ‘வாலு' படம் வெளியாகி திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பின்போது சிம்புவிடம், அவரது ஆன்மீக ஈடுபாடு, திருமணம் குறித்து கேட்கப்பட்டது.
அதற்கு பதிலளித்த சிம்பு, "என்னுடைய திருமணத்தை நான் கடவுளிடம் ஒப்படைத்துவிட்டேன். இப்போதைக்கு படங்களில் நடிப்பது மட்டுமே எனது வேலை. மிச்சத்தை கடவுள் தீர்மானிப்பார்.
நான் வணங்கும் சிவன், சாய்பாபா என்னை வழி நடத்துவார்கள். இவர்களைத்தான் நான் தினமும் வணங்கி வருகிறேன். எனக்குக் கல்யாணத்தை எப்போ நடத்தணும்னு கடவுள் நினைக்கிறாரோ அன்றைக்கு அது நிச்சயமா நடக்கும்.
நான் அதைப் பத்தியெல்லாம் இப்போ யோசிச்சுக்கலை. இப்போ என்னுடைய முழு கவனமும் என்னுடைய அடுத்தடுத்த படங்கள் மீதுதான் உள்ளது," என்றார்.
Post a Comment