'குண்டு' நமீதா 20 கிலோ எடைகுறைத்து 'ஸ்லிம் பியூட்டி' ஆனது எப்படி?

|

மச்சான்ஸ் மச்சான்ஸ் என கொஞ்சலாகப் பேசி, ஹார்ட் பீட்டை எகிற வைத்துக் கொண்டிருந்த நமீதாவை கொஞ்ச நாளாக எங்குமே பார்க்க முடியவில்லை. உடல் பருமன் பிரச்சினை காரணமாக படங்களில் நடிப்பதையும் வெளி நிகழ்ச்சிகளுக்குச் செல்வதையும் கூட நிறுத்திக் கொண்டார்.

ஒரு சின்ன இடைவெளிவிட்டு மீண்டும் நேற்று தரிசனம் தந்தார். அட, எங்கள் அண்ணா, ஏய் பட காலத்து நமீதாவாக திரும்பியிருந்தார்!

How Namitha becomes slim beauty again?

ஆம், 20 கிலோ எடை குறைந்து புதிய தோற்றத்தில் காணப்பட்டார் நமீ. அவரைப் பார்க்கிற யாரும் நம்ப முடியாமலேயே பார்த்தார்கள். பத்திரிகையாளர்களில் சிலர் உடன் நின்று புகைப்படம் எடுத்து மகிழ்ந்தார்கள்.

காரணம் இப்படி மெலிந்த நமீதாவை யாருமே கற்பனை செய்து கூடப் பார்க்கவில்லை.

எப்படி முடிந்தது இது? அந்த அனுபவத்தை நடிகை நமீதா இப்படிக் கூறினார்:

''உண்மையைச் சொல்கிறேன். ஒரு கட்டத்தில் என் எடை அதிகமாகிக்கொண்டே இருந்தது. பட வாய்ப்புகளும் குறைந்து விட்டன. நான் மிகவும் மனச் சோர்வுக்கு ஆளானேன். இதுபற்றி நான் அடைந்த வருத்தமும் உளைச்சலும் எளிதில் விளக்கிட முடியாதவை. எடையைக் குறைக்க எவ்வளவோ வழிகளில் முயற்சி செய்து பார்த்து விட்டேன். என்னென்னவோ பயிற்சி, சிகிச்சை முறைகள் எல்லாம் பின்பற்றினேன். ஆனால் பலனில்லை.

How Namitha becomes slim beauty again?

மிகவும் வெறுத்துப் போய்விட்டேன். எப்படியாவது குறைத்தாக வேண்டும், வாழ்வா சாவா என்கிற போராட்டம். அப்படிப்பட்ட சூழலில்தான் சாக்ஷி வெல்னஸ் பற்றி . தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி மூலம் கேள்விப்பட்டேன்.

எனக்கு நம்பிக்கையில்லை. ஏனென்றால் எவ்வளவோ பார்த்தாகி விட்டது. எடை மட்டும் குறையவேயில்லை. இப்படித்தான் அவர்களையும் பார்த்தேன். ஆரம்பத்தில் அவர்கள் மீது நம்பிக்கையில்லை.

முதலில் ஒன்றரை கிலோ எடை குறைந்தது. எனக்கே அது அதிர்ச்சியாக இருந்தது, பிறகுதான் நம்பிக்கை வந்தது. இப்படி முன்றே மாதங்களில் சுமார் 20 கிலோ எடை குறைந்தது. அவர்கள் சிகிச்சை, பயிற்சி, உணவு முறை இவற்றை சரிவர பார்த்துக் கொண்டார்கள். நம்பிக்கையையும் ஊக்கமும் கொடுத்தார்கள். இப்போது நான் நம்பிக்கையுடன் இருக்கிறேன். மற்றவர்களுக்கும் சிபாரிசு செய்கிறேன். அவர்களுக்கு பிராண்ட் அம்பாசிடராகவும் ஆகிவிட்டேன்.

என்னை இப்போது பார்ப்பவர்கள் என் உணவு பற்றிக் கேட்கிறார்கள். அரிசி உணவுகளை முற்றிலும் தவிர்த்து விட்டேன். காபி, டீ, கிடையாது. நான் ஒரு பீட்ஸாப் பிரியை. பீட்ஸா டோமினோவில் பிளாட்டினம் மெம்பர் நான். அந்தஅளவுக்கு பீட்ஸா சாப்பிடுவேன். அந்த அளவுக்கு பீட்ஸா சாப்பிட்ட நான் இப்போது மாதம் ஒன்றுதான் சாப்பிடுகிறேன்.

இனி பட வாய்ப்புகள் வரும் என்று நம்புகிறேன். இப்போதைய என் உடல் கட்டுக்கு ஏற்ப ஆக்ஷன் நாயகியாக நடிக்க விரும்புகிறேன்.

என் ஊர் சென்னைதான்!

என் சொந்த ஊர் குஜராத் என்பதே எனக்கு மறந்து விட்டது. ஹோலி, ராக்கி ரக்ஷாபந்தன் எல்லாம் மறந்து விட்டது. இங்கு கொண்டாடப்படும் பொங்கல்தான் இனி எனக்கு பண்டிகை. என் மாநிலம் தமிழ்நாடு. என் ஊர் சென்னைதான். இந்த ஊரை விட்டு இனி எங்கும் செல்லமாட்டேன்,'' என்றார்.

நிகழ்ச்சியில் சாக்ஷி வெல்னஸ் நிறவனத்தின் நிர்வாக இயக்குநர் சிவாஜி குணா, சிகிச்சைப் பிரிவுத் தலைவர் ஸ்ரீமன் நாராயணா, தொழில்நுட்பப் பிரிவைச்சேர்ந்த வித்யா, தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி ஆகியோரும் பங்கேற்றனர்.

 

Post a Comment