பாகுபலி திரைப்படம் இந்தியாவில் இதுவரை எந்தப் படமும் செய்யாத பெரும் சாதனையை வசூலில் நிகழ்த்தியுள்ளது. இந்தப் படம் மட்டும் ரூ 600 கோடியை இதுவரை குவித்துள்ளது.
அமெரிக்காவில் ரூ 45 கோடியை இந்தப் படம் குவித்துள்ளது.
இப்போது இதன் இரண்டாம் பாகம் தயாராகி வருகிறது. அதற்குள் படத்துக்கு பிஸினஸ் பேச ஆரம்பித்துவிட்டார்கள்.
இந்தப் படத்தைத் தயாரிக்க, யாரிடமும் ஒரு ரூபாய் கூட பைனான்ஸ் வாங்கப் போவதில்லை என முடிவு செய்துள்ளனர். மாறாக படத்தை வாங்கி வெளியிடப் போகும் விநியோகஸ்தர்களிடமிருந்து பெரிய அட்வான்ஸை வாங்கிக் கொள்ளப் போகிறார்களாம்.
முதல் பாகத்துக்கு தெலுங்கு மீடியாவின் பெரும் தலை ராமோஜி ராவ் பைனான்ஸ் செய்திருந்தார். இந்த முறை அவரிடம் போகாமல், முழுப் பணத்தையும் விநியோகஸ்தர்களிடமிருந்து அட்வான்ஸாகவே பெறப் போகிறார்களாம்.
பாகுபலி முதல் பாகத்தில் நடித்த அத்தனை பேரும் இரண்டாம் பாகத்திலும் தொடர்கிறார்கள்.
Post a Comment