சென்னை: சுமாரான மூஞ்சி கொண்ட அந்த நடிகர் சமீபத்தில் தயாரித்த மிட்டாய் திரைப்படம் நடிகரின் கையை நன்றாக சுட்டு விட்டது, நம்பித் தயாரித்தேன் ஆனால் படம் ஓடவில்லையே என்று நடிகர் தற்போது புலம்பி வருகிறாராம்.
படம் கொடுத்த அதிர்ச்சியில் இருந்து மீளாத அந்த நடிகரிடம் சமீபத்தில் ஒரு இயக்குநர் கதை சொல்லியிருக்கிறார், கதையைக் கேட்ட நடிகர் நடிக்க ஒப்புக் கொண்டு விட்டாராம்.
ஆனால் அதற்கு அடுத்து இயக்குநர் வைத்த கோரிக்கையில் நடிகர் அய்யோ சாமி ஆளை விடுங்க என்று சொல்லியிருக்கிறார். அப்படி என்ன தான் கேட்டார் அந்த இயக்குநர் வேறு ஒன்றுமில்லை இந்தப் படத்தை நீங்களே தயாரித்தால் நன்றாக இருக்கும் என்று கூறினாராம்.
இயக்குனரின் கோரிக்கையைக் கேட்ட நடிகர் கதை எனக்குப் பிடித்திருக்கிறது ஆனால் சொந்தப் படம் தயாரிக்கும் எண்ணம் எதுவும் இல்லை என்று கூறிவிட்டாராம்.
இதனால் தற்போது தயாரிப்பாளரை தீவிரமாகத் தேட ஆரம்பித்து இருக்கிறாராம் இயக்குநர்.
Post a Comment