தனி ஒருவன் படத்தை முதலில் தெலுங்கில் ரீமேக் செய்யத் தயாராகிவிட்டார் மோகன் ராஜா.
இந்தப் படத்தை தெலுங்கு, இந்தியில் ரீமேக் செய்ய பல முன்னணி நடிகர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
சமீபத்தில் சல்மான் கான் இந்த படத்தை பற்றி அறிந்து, இதன் இந்தி ரீமேக்கில் நடிக்க விருப்பம் தெரிவித்தாக கூறப்படுகிறது.
தற்போது தெலுங்கில் முன்னணி நடிகராக இருக்கும் மகேஷ் பாபு ‘தனி ஒருவன்' படத்தை பற்றி புகழ்ந்ததாகவும் இதன் ரீமேக்கில் நடிக்க விரும்புவதாகவும் கூறப்படுகிறது.
ஏற்கனவே மகேஷ்பாபு ஒரு நிகழ்ச்சியில் மோகன் ராஜா இயக்கத்தில் நடிக்க விருப்பம் இருப்பதாக தெரிவித்திருந்தார். அனேகமாக ‘தனி ஒருவன்' தெலுங்கு ரீமேக்கில் மகேஷ் பாபு நடிப்பார் என்று ஏதிர்ப்பார்க்கப்படுகிறது.
அதே நேரம், இந்தப் படத்தில் நடிக்க சிரஞ்சீவி மகன் ராம்சரணும் ஆர்வம் காட்டி வந்தார். ஆனால் இந்தப் படத்தைப் பொறுத்தவரை மகேஷ் பாபுவை வைத்து இயக்கவே மோகன் ராஜா ஆர்வம் காட்டுவதாகக் கூறப்படுகிறது.
Post a Comment