ஜெயம் ரவியும் லட்சுமி மேனனும் முதல் முறையாக ஒரு படத்தில் ஜோடி சேர்கிறார்கள். படத்துக்கு மிருதன் என்று தலைப்பிட்டுள்ளனர்.
நாடோடிகள், கோரிப்பாளையம், பட்டத்துயானை உட்பட பல வெற்றிப்படங்களைத் தயாரித்த எஸ். மைக்கேல் ராயப்பனின் குளோபல் இன்ஃபோடெயின்மெண்ட் படநிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்தை சக்தி சௌந்தர்ராஜன் இயக்குகிறார். நாணயம், நாய்கள் ஜாக்கிரதை படங்களை இயக்கியவர் இவர்.
இந்தப் படத்துக்கு டி.இமான் இசையமைக்க, பாடல்களை எழுதுகிறார் மதன் கார்க்கி.
மிருதன் படத்தின் பாடல் பதிவு நடைபெற்று வருகிறது.
கத்தி படத்தில் ஆத்தி பாடலைப் பாடிய விஷால் தட்லானி மற்றும் ஸ்ரேயா கோஷல் பாடிய இரண்டு பாடல்கள் இதுவரை பதிவு செய்யப்பட்டுள்ளன.
மிருதன் படத்தின் முதல் கட்டப் படப்பிடிப்பு ஊட்டியில் 30 நாட்கள் நடைபெற்று முடிந்தது. அடுத்த கட்டப் படப்பிடிப்பு இம்மாதம் 18 ஆம் தேதி சென்னையில் துவங்கி, தொடர்ந்து ஹைதராபாத்தில் நடைபெற்று, அக்டோபர் மாத இறுதியில் முழுப் படப்பிடிப்பும் முடிவடைகிறது.
மிருதன் படத்தில் புகைபிடிப்பதுபோன்ற காட்சிகளோ, குடிப்பது போன்ற காட்சிகளோ இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
எஸ்.வெங்கடேஷ் ஒளிப்பதிவு செய்கிறார். இவர் வடகறி படத்துக்கு ஒளிப்பதிவு செய்தவர். கலை - எஸ்.எஸ்.மூர்த்தி, படத்தொகுப்பு: கே.ஜெ. வெங்கட் ரமணன். இவர் ஆடாம ஜெயிச்சோமடா படத்துக்கு படத்தொகுப்பாளராகப் பணியாற்றியவர். நடனம் - பாபி, சண்டைப்பயிற்சி - கணேஷ். இவர் சிறுத்தை படத்தின் ஸ்டண்ட் மாஸ்டர்.
உடைகள் - ஜாய் கிறிசில்டா தயாரிப்பு நிர்வாகம் - குமார், சிவகுமார், ராஜ்குமார், மஞ்சு
தயாரிப்பு: செராஃபின் சேவியர்.
Post a Comment