சென்னை: ஓ காதல் கண்மணி படத்தைத் தொடர்ந்து மணிரத்னம் இயக்கும் அடுத்த படத்தில் கார்த்தி, துல்கர், கீர்த்தி சுரேஷ் ஆகியோர் நடிக்கவிருக்கின்றனர்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகள் பலருக்கும் கிடைக்காத வாய்ப்பு கீர்த்தி சுரேஷிற்கு கிடைத்தது எப்படி? என்கிற கேள்வி பலரின் மனதையும் போட்டுக் குடைந்து கொண்டிருந்தது.
இதற்கு விடை சமீபத்தில் கிடைத்திருக்கிறது மேலும் இந்தத் தகவலை படப்பிடிப்புக் குழுவினரே வெளியிட்டிருக்கின்றனர். கீர்த்தி சுரேஷிற்கு வாய்ப்பு கிடைக்க காரணம் செந்தமிழ் தான் காரணமாம்.
ஓ காதல் கண்மணி படத்தில் லைவ் சவுண்ட் என்கிற சிங்க் சவுண்ட் (Sync Sound) முறையைப் பயன்படுத்தினார் மணி ரத்னம். அது சிறப்பாக வந்ததால் அடுத்தப் படத்திலும் சிங்க் சவுண்டைப் பயன்படுத்த உள்ளார்.
‘இதனால் தமிழ் தெரிந்த நடிகைதான் பொருத்தமாக இருப்பார் என மணிரத்னம் முடிவு செய்தார். நடிகை கீர்த்தி சுரேஷ் நன்றாகத் தமிழ் பேசுபவர் என்பதால் அவருக்கு அந்த வாய்ப்பு சுலபமாகக் கிடைத்தது. இரண்டாவது ஹீரோயினுக்காக தேர்வு நடைபெற்று வருகிறது' என்று படக்குழுவினர் தெரிவித்திருக்கின்றனர்.
பிரபல ஒளிப்பதிவாளர் ரவிவர்மன் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்துக்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கிறார். படப்பிடிப்பு டிசம்பர் முதல் ஆரம்பமாகிறது.
தமிழுக்கும் அமுதென்று பேர்....
Post a Comment