கால்ஷீட்டை வீணடிச்சதுக்காக நான்தான் புகார் தரணும்! - நயன்தாரா

|

என் கால்ஷீட்டை வீணடிச்சதுக்காக டி ராஜேந்தர் மேல நான்தான் புகார் தந்திருக்கணும் என்று நடிகை நயன்தாரா பதில் அளித்துள்ளார்.

சிம்பு நடிக்கும் இது நம்ம ஆளு படம் இறுதிக்கட்ட வேலைகள் முடிந்து, இரண்டு பாடல் காட்சிகள் எடுக்கப்படாததால் வெளியாகாமல் நிற்கிறது.

T Rajendar wanted my dates, says Nayanthara

இந்தப் பாடல் காட்சிகளில் நடிக்க நாயகி நயன்தாரா மறுப்பதாகவும், மீதிப் பணம் கொடுத்தால்தான் நடிப்பேன் என்று அடம்பிடிப்பதாகவும் தயாரிப்பாளர் டி ராஜேந்தர் தயாரிப்பாளர் சங்கத்தில் நயன்தாரா மீது புகார் கொடுத்துள்ளார்.

T Rajendar wanted my dates, says Nayanthara

இந்தப் புகாருக்கு நயன்தாரா பதில் அளித்துள்ளார்.

அதில், "நான் இந்தப் படத்தின் பாடல் காட்சிகளுக்காக பல முறை தேதிகள் ஒதுக்கிக் கொடுத்துவிட்டேன். ஆனால் ஒருமுறை கூட அவற்றை சிம்புவும் அவர் தந்தை ராஜேந்தரும் பயன்படுத்திக் கொள்ளவில்லை. இப்போது நான் வேறு படங்களில் பிஸியாக இருப்பதால் அவர்கள் கேட்கும் தேதியில் நடிக்க முடியவில்லை.

T Rajendar wanted my dates, says Nayanthara

நியாயமாக என் கால்ஷீட்டை வீணடித்ததற்காக நான்தான் புகார் தந்திருக்க வேண்டும்," என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

Post a Comment