நாய்களைக் கொல்லாதீங்க, நிறுத்துங்க.. கேரள முதல்வருக்கு சோனாக்ஷி கோரிக்கை

|

மும்பை: கேரளாவில் தெரு நாய்கள் கொலை செய்யப்படுவதை தடை செய்ய வேண்டும் என்று பாலிவுட் நடிகை சோனாக்க்ஷி சின்ஹா தனது ட்விட்டர் பக்கத்தில் கேரள முதல்வர் உம்மன் சாண்டிக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

கேரளாவில் தெருக்களில் உள்ள நாய்கள் மனிதர்களுக்கு இடையூறாக இருக்கின்றன என அவைகளை கொடூரமாக கொலை செய்து வருகிறார்கள். இதனை எதிர்த்து நாடு முழுவதும் போராட்டங்கள், சமூக வலைகளில் எதிர்ப்புகள் நடந்து வருகின்றன.

கேரளாவில் தெருவில் உள்ள நாய்களை கொலை செய்வதை தடை செய்ய வேண்டும் என்று சில நாட்களுக்கு முன்னர் நடிகர் விஷால் உண்ணாவிரதம் இருந்து தனது எதிர்ப்பைப் பதிவு செய்தார்.

விஷாலைத் தொடர்ந்து பாலிவுட் நடிகை சோனாக்‌ஷி சின்ஹா தனது ட்விட்டர் பக்கத்தில் கேரள முதலைமச்சர் உம்மன் சாண்டிக்கு கோரிக்கை ஒன்றை விடுத்திருக்கிறார்.

அதில் கேரளாவில் தெரு நாய்களை கொலை செய்வதை தடுக்க வேண்டும் என கேரள முதலமைச்சரிடம் விண்ணப்பித்து இருக்கிறார் மேலும் 'இந்த மனிதநேயமற்ற செயலை தயவு செய்து நிறுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன். நீங்கள் கண்டிப்பாக இதைச் செய்ய வேண்டும்' எனவும் கேட்டுக் கொண்டுள்ளார்.

மேலும் சோனாக்க்ஷி சின்ஹாவின் இந்த கோரிக்கைக்கு ஆதரவு எழுந்திருக்கும் அதே நேரத்தில், பல பேர் தங்கள் எதிர்ப்பைப் பதிவு செய்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.

 

Post a Comment