சவரகத்தி படத்தில் நடித்து வரும் இயக்குநர் மிஷ்கின், தனது இயக்கத்தில் அடுத்த புதுப் படத்தை அறிவித்துள்ளார்.
மிஷ்கின் இயக்கத்தில் கடைசியாக வெளிவந்த பிசாசு படம் நல்ல வெற்றியைப் பெற்றது. அதன் பிறகு தனது புதுப் படத்தை அறிவிக்காமல், 'சவரகத்தி' படத்தில் நடிக்கப் போய்விட்டார்.
இப்போது தனது இயக்கத்தில் அடுத்த புதுப்படத்தை உருவாக்கும் முயற்சியில் இறங்கியுள்ளார்.
இந்தப் படத்துக்கான ஷூட்டிங் வரும் நவம்பரிலிருந்து தொடங்கவிருக்கிறார். ட்ரான்ஸ்வேல்ட் டெலி கம்யூனிகேஷன்ஸ் என்ற புதிய நிறுவனத்தின் மூலம் ரகுநந்தன் தயாரிக்கும் இந்தப் படத்தில் கதா நாயகனாக அறிமுகமாக உள்ளார் புது முகம் ஷ்யாம். இந்த படத்தில் நடிக்க உள்ள மற்ற நடிக , நடிகையர் , தொழில் நுட்பக் கலைஞர்கள் ஆகியோரின் தேர்வு நடைப்பெற்றுக் கொண்டு இருக்கிறது.
'சவரகத்தி' படத்தின் இடை விடாத படப்பிடிப்புக்கிடையே மிஷ்கின் தனது புதிய படத்தின் கதை, திரைக்கதையை எழுதிக் கொண்டிருக்கிறார்.
இது ஒரு க்ரைம் த்ரில்லராக உருவாகிறது.
Post a Comment