சென்னை: நடிகை ஸ்ரீதேவியின் மூத்த மகள் ஜான்வி துல்கர் சல்மான் ஜோடியாக நடிக்க உள்ளார் என்று கூறப்படுகிறது.
கோலிவுட்டில் இருந்து சென்று பாலிவுட்டில் செட்டிலான நடிகை ஸ்ரீதேவியின் மூத்த மகள் ஜான்வி நடிகையாகத் தயாராகிவிட்டார். தாயுடன் சேர்ந்து பொது நிகழ்ச்சிகளுக்கு வந்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார். அவரைத் தேடி பட வாய்ப்புகள் வருகின்றபோதிலும் அவர் இதுவரை எந்த படத்திலும் நடிக்க ஒப்புக் கொள்ளாமல் இருந்தார்.
இந்நிலையில் இயக்குனர் எஸ்.எஸ். ராஜமவுலியின் தந்தை கே.வி. விஜயேந்திர பிரசாத் மம்மூட்டியின் மகன் துல்கர் சல்மானை வைத்து படம் ஒன்றை எடுக்கிறாராம். அந்த படத்தில் சல்மானுக்கு ஜோடியாக நடிக்க ஜான்வியை கேட்டுள்ளாராம் பிரசாத். ஜான்விக்கும் கதை பிடித்துவிட்டது என்று கூறப்படுகிறது.
இந்த படம் மலையாளம், தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி ஆகிய நான்கு மொழிகளில் எடுக்கப்படுகிறது. இந்நிலையில் இந்த படம் மூலம் துல்கர் சல்மான் பாலிவுட் செல்கிறார். ஓ காதல் கண்மணி படம் மூலம் தமிழ்நாட்டு ரசிகர்களின் மனதை கவர்ந்த துல்கர் தற்போது தமிழில் ஒரு படத்திலும், மலையாளத்தில் 2 படங்களிலும் நடித்து வருகிறார்.
நடிகை அமலாவின் மகன் அகில் ஜோடியாக ஜான்வி அறிமுகமாவார் என்று கூறப்பட்டது. ஆனால் அகில் படத்தில் நடிக்க ஜான்வி ஒப்புக்கொள்ளவில்லை.
Post a Comment