வரும் அக்டோபர் முதல் தேதி புலி உலகெங்கும் பிரமாண்டமாய் வெளியாகிறது. இந்தப் படத்தை முழுமையாய் பார்த்திராத விஜய், நேற்று தன் குடும்பத்தினருடன் புலி பார்த்து மகிழ்ந்தார்.
சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள அரசு இசைப் பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள சர்வதேசத் தரம் வாய்ந்த தாகூர் ப்ரிவியூ திரையரங்கில் இந்தப் படத்தைப் பார்த்தனர் விஜய்யும் குடும்பத்தினரும்.
விஜய்யுடன் அவரது நெருங்கிய நண்பர்களும் படத்தைப் பார்த்தனர். பார்த்த அனைவரும் படத்தையும் அதில் விஜய்யின் நடிப்பையும் வெகுவாகப் பாராட்டினர்.
நாளை மறுநாள் உலகெங்கும் வெளியாகிறது புலி. சிம்பு தேவன் இயக்கியுள்ள இந்தப் படத்தில் ஹன்சிகா, ஸ்ருதிஹாஸன், ஸ்ரீதேவி, சுதீப் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்க, பிடி செல்வகுமாரும் ஷிபு தமீன்ஸூம் படத்தைத் தயாரித்துள்ளனர்.
Post a Comment