நயனுக்கு எதிராக நாங்க எந்தப் புகாரும் கொடுக்கலையே- சிம்பு

|

சென்னை: இது நம்ம ஆளு பட விவகாரத்தில் நயன்தாராவுக்கு எதிராக நாங்கள் புகார் எதுவும் கொடுக்கவில்லை என்று நடிகர் சிம்பு கூறியிருக்கிறார்.

இது நம்ம ஆளு படத்தில் 2 பாடல் காட்சிகள் பாக்கி இருப்பதாகவும் அதில் நடித்துக் கொடுக்க நயன்தாரா மறுப்பதால் அவர் மீது நடவடிக்கை எடுக்கும் படியும் படத்தின் தயாரிப்பாளர் டி.ராஜேந்தர் தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளித்திருந்தார்.

Simbu Says

இந்த விவகாரத்தில் நயன்தாரா மீது எந்தத் தவறும் இல்லை சிம்புவும் அவரது அப்பாவும் தான் நயன்தாராவின் கால்ஷீட்டை வீணடித்தனர் என்று இயக்குநர் பாண்டிராஜ் நயன்தாராவுக்கு ஆதரவு தெரிவித்திருந்தார்.

தற்போது இந்த விவகாரத்தில் "நாங்கள் நயன்தாரா மீது எந்தப் புகாரும் கொடுக்கவில்லை அவரிடம் இருந்து கால்ஷீட் வாங்கித் தாருங்கள் என்று தயாரிப்பாளர் சங்கத்திடம் கோரிக்கை மட்டும் தான் விடுத்தோம்.

மேலும் நாங்கள் அவருக்கு கொடுக்க வேண்டிய பணத்தை கொடுத்து விடுகிறோம் அவர் கால்ஷீட் தந்தால் பாடல்களை இணைத்து வெளியிடலாம். இல்லையெனில் பாடல்களை சேர்க்காமலேயே படத்தை வெளியிட்டு விடலாம் என்று தான் கூறியிருந்தோம்" என்று தற்போது இந்த விவகாரத்தில் நீண்ட விளக்கம் அளித்திருக்கிறார் நடிகர் சிம்பு.

மேலும் தனது ட்விட்டர் பக்கத்தில் இது நம்ம ஆளு திரைப்படம் விரைவில் வெளியாகும் வதந்திகளை நம்ப வேண்டாம் என்று சிம்பு கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.

 

Post a Comment