சென்னை: தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான "அஜீத்தை சந்தித்தது மற்றும் அவரிடம் பேசியது ஆகியவை எனது வாழ்க்கையை மாற்றிய தருணங்கள்" என்று இளம் நடிகர் சிவகார்த்திகேயன் கூறியிருக்கிறார்.
ஒரு அன்பான சகோதரன் அல்லது அப்பா என்னருகில் இருந்து எனது முதுகில் தட்டிக் கொடுத்தது போன்று அவரின் வார்த்தைகள் எனக்கு உற்சாகம் கொடுத்தன.
நான் அவரைச் சந்தித்து பேசியது பற்றி இதுவரை நான் யாரிடமும் தெரிவித்தது இல்லை, ஏனெனில் அது ஒரு இலவச விளம்பரம் போன்று ஆகிவிடக்கூடாது.
நாங்கள் சந்தித்துப் பேசியபோது மிகவும் குறைவான நேரம் மட்டுமே நாங்கள் சினிமாவைப் பற்றி விவாதித்தோம். அவர் எனக்கு எந்தவித அறிவுரையும் வழங்கவில்லை.
அவரின் வாழ்க்கையில் நடந்த சில சம்பவங்களை பற்றி என்னிடம் பகிர்ந்து கொண்டார். நான் ஒரு மிகப்பெரிய நடிகரைச் சந்தித்தேன் என்று கூறுவதைவிட நல்ல ஒரு மனிதனை சந்தித்தேன் என்றுதான் கூறவேண்டும்.
அவரைச் சந்தித்த பின்பு எனது வாழ்க்கை மாறியது போன்று உணர்கிறேன்" என்று அஜீத்தை சந்தித்த தருணத்தைப் பற்றி உருகிக் கரைந்திருக்கிறார் சிவகார்த்திகேயன்.
அஜீத்தோட பிரியாணி பத்தி ஒண்ணுமே சொல்லலையே?
Post a Comment