சென்னை: புலி திரைப்படத்தை குடும்பம் குடும்பமாக சென்று திரையரங்குகளில் பார்த்து மகிழுங்கள் என்று நடிகை ஸ்ரீதேவி தனது ரசிகர்களுக்கு அன்புக் கட்டளையிட்டுள்ளார்.
விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ‘புலி திரைப்படத்தை இயக்குநர் சிம்புதேவன் இயக்கியுள்ளார். ஸ்ருதிஹாசன், ஹன்சிகா ஆகியோர் கதாநாயகிகளாக நடித்துள்ளனர்.
நீண்ட இடைவெளிக்கு பிறகு இப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு ரீ-என்ட்ரி கொடுத்திருக்கிறார் நடிகை ஸ்ரீதேவி. இவர் புலி திரைப்படத்தில்
ராணி வேடத்தில் நடித்துள்ளார்.
இப்படத்தின் டிரைலர் மற்றும் பாடல்கள் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே பெறும் வரவேற்பை பெற்றுள்ளது. இப்படத்தில் நடித்துள்ள ஸ்ரீதேவியை மையப்படுத்தி இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது குறிப்பிடத்தக்கது.
இந்த போஸ்டரை தனது டுவிட்டர் இணையதளத்தில் ஸ்ரீதேவி பதிவிட்டு தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி இருக்கிறார். தற்போது ஸ்ரீதேவி தனது ட்விட்டர் பக்கத்தில் பின்வருமாறு கூறியிருக்கிறார்.
Sharing the look of PULI. A fun filled fantasy! Pull yourself with your kids & friends to the nearest theater.Oct 1st pic.twitter.com/yuAK5iIXC9
— SRIDEVI BONEY KAPOOR (@SrideviBKapoor) September 20, 2015
"அக்டோபர் முதல் தேதி வெளியாகும் ‘புலி' படத்தை உங்கள் குடும்பம், குழந்தைகள், நண்பர்களுடன் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் பார்த்து மகிழுங்கள்" என்று தெரிவித்துள்ளார்.
Post a Comment