பிரபல நடிகை பாவனாவின் தந்தை பாலச்சந்திரன் (59) திருச்சூரில் இன்று காலமானார்.
மலையாளம், தமிழ், தெலுங்குப் படங்களில் நடித்தவர் பாவனா. மலையாளத்தில் இப்போதும் முன்னணி நடிகையாக உள்ளார்.
இவரது தந்தை பாலச்சந்திரன், புகைப்பட கலைஞராக இருந்தார். கடந்த 21-ந்தேதி இவருக்கு திடீரென உடல்நலக் குறைவு. உறவினர்கள் உடனடியாக அவரை அருகில் உள்ள மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.
அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி பாலச்சந்திரன் இறந்தார். மருத்துவமனையில் அவருடன் பாலச்சந்திரனின் மனைவி புஷ்பா, மகன் ஜெயதேவன் மற்றும் பாவனா ஆகியோர் உடனிருந்தனர்.
பாலச்சந்திரனின் இறுதிச் சடங்கு இன்று மாலை மணிக்கு திருச்சூரில் உள்ள சாந்திக்காட் மயானத்தில் நடக்கிறது.
Post a Comment