த்ரிஷா இல்லன்னா நயன்தாரா படத்தின் விளம்பர நிகழ்ச்சிகளில் பங்கேற்ற அதன் இயக்குநருக்கும் நாயகி கயல் ஆனந்திக்கும் பெரும் தகராறு, கைகலப்பு வரை போயுள்ளது.
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில், ஜிவி பிரகாஷ் குமார் - ஆனந்தி நடித்துள்ள இந்தப் படத்துக்கு ஏ சான்று அளித்துள்ளது சென்சார்.
இந்தப் படத்தின் புரமோஷன் எனப்படும் விளம்பர நிகழ்ச்சியில் பங்கேற்க ஒரு தனியார் தொலைக்காட்சிக்கு சென்றுள்ளனர் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரனும், நாயகி ஆனந்தியும். அங்கே படத்தில் தனக்கு சரியான பாத்திரம் அமையவில்லை என்று குறைபட்டாராம் ஆனந்தி. அங்கேயே இருவருக்கும் சண்டை ஆரம்பித்துவிட்டிருக்கிறது.
அடுத்து அங்கிருந்து நேராக ஒரு பண்பலை வானொலியில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளனர். அங்குதான் பெரிய சண்டையாகிவிட்டதாம்.
தன் கேரியரையே இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் சீரழித்துவிட்டார் என்று நிகழ்ச்சியில் பகிரங்கமாக குற்றம்சாட்டியுள்ளார் ஆனந்தி. காரணம் படத்தில் தன்னை ஆபாசமாகவும், மோசமான முறையில் காட்டியுள்ளதாக கூறினாராம். பதிலுக்கு அங்கேயே ஆனந்தியை திட்டியுள்ளார் இயக்குநர். ஒரு கட்டத்தில் இருவருக்கும் கைகலப்பு ஏற்பட்டுள்ளது. பின்னர் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தவர்கள் இருவரையும் விலக்கி அனுப்பியுள்ளனர்.
Post a Comment