ஐஸ் என்ற பெயரில் புதிய தயாரிப்பு நிறுவனம் தொடங்கியுள்ளார் நடிகர் அருண் விஜய்.
பிரபல நடிகர் விஜயகுமாரின் மகனான அருண் விஜய், திரையுலகில் தனக்கென ஒரு இடத்துக்காக போராடியவர். தடையறத் தாக்க படத்தில் அவருக்கு பெரும் திருப்பம் கிடைத்தது. அஜீத்துக்கு வில்லனாக அவர் நடித்த என்னை அறிந்தால் படம் அவரை முன்னணி நாயகனாக மாற்றியது. அடுத்து இவர் நடித்துள்ள வா படம் விரைவில் வெளியாக உள்ளது.
இப்போது சொந்தமாக பட நிறுவனம் தொடங்கியுள்ளார் அருண் விஜய். ‘இன் சினிமாஸ் என்டர்டெயின்மென்ட் (ICE)' என்று அதற்கு பெயரிட்டுள்ளார்.
இதன் மூலம் புதிய கலைஞர்களை அறிமுகப்படுத்தவுள்ளதாகவும், திறமையிருந்தும் சாதிக்க வாய்ப்பிலாமல் இருக்கும் இளைஞர்களுக்கு உதவுவதற்காகவே இந்த சினிமா நிறுவனத்தை தொடங்கியுள்ளதாகவும் நேற்று அறிவித்தார்.
வா படத்துக்குப் பிறகு கவுதம் மேனன் இயக்கத்தில் அருண் விஜய் மீண்டும் நடிக்க இருக்கிறார். தெலுங்கில் ராம் சரண் மற்றும் கன்னடத்தில் புனீத் ராஜ்குமார் ஆகியோரின் படங்களிலும் அருண் விஜய் நடித்து வருகிறார்.
Post a Comment