பிரஷாந்தால்தான் ப்ளஸ் டூவில் நான் குறைந்த மதிப்பெண் பெற்றேன் என்றார் நா முத்துகுமார்.
பிரஷாந்த் நடிப்பில் தற்போது உருவாகியிருக்கும் படம் ‘சாஹசம்'. இதில் பிரசஷாந்த்துக்கு ஜோடியாக ஆஸ்திரேலிய அழகி அமண்டா நடிக்கின்றார்.
இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று பிரசாத் லேபில் நடந்தது. இதில் நடிகர் பிரஷாந்த், தயாரிப்பாளர் தியாகராஜன், நா.முத்துக்குமார், இசையமைப்பாளர் தமன் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்துக் கொண்டனர்.
விழாவில் நா.முத்துக்குமார் பேசும்போது ஒரு சுவாரஸ்யமான விஷயத்தைச் சொன்னார்.
"நான் பிளஸ்-2 படிக்கும் போது பிரஷாந்த் நடித்த ‘வைகாசி பொறந்தாச்சு' படம் வெளியானது. இந்த படத்தை பிரஷாந்த்திற்காக பத்து தடவை, தேவாவிற்காக பத்து தடவை என பல முறை இப்படத்தை பார்த்திருக்கிறேன். நான் பிளஸ்-2வில் குறைந்த மதிப்பெண் எடுத்ததற்கு பிரஷாந்த்தான் காரணம். எனக்கும் பிரஷாந்திற்கும் ஒரு வயதுதான் வித்தியாசம் இருக்கும். நான் படிக்கும் போது, பிரஷாந்த் போல் ஹேர் ஸ்டைல் இருக்கும். இப்போது ஸ்டைலும் இல்லை, ஹேரும் இல்லை.
நான் முதலில் சீமான் நடித்த ‘வீரநடை' படத்திற்குதான் பாடல்கள் எழுத ஆரம்பித்தேன். அதன் பிறகு பிரஷாந்த் நடித்த ‘ஹலோ' படத்தில் இடம் பெற்ற ‘சலாம் குலாமு...' என்ற பாடலை எழுதினேன். இப்படம் பட்டி தொட்டி எங்கும் எதிரொலித்தது. இப்பாடலின் வெற்றிக்குப் பிறகுதான் எனக்கு நிறைய பட வாய்ப்புகள் கிடைத்தன," என்றார் முத்துக்குமார்.
Post a Comment