பாடகரும் நடிகருமான க்ரிஷ்ஷின் நெடு நாள் ஆசையை நேற்று நிறைவேற்றி வைத்துள்ளார் ரஜினிகாந்த்.
நடிகை சங்கீதாவின் கணவரும், ஏராளமான பின்னணி பாடல்களைப் பாடியுள்ளவருமான க்ரிஷ், சமீபத்தில் வெளியான புரியாத ஆனந்தம் புதிராக ஆரம்பம் படத்தில் ஹீரோவாகவும் நடித்தார்.
இவருக்கு நீண்ட நாட்களாக ரஜினியைச் சந்தித்து ஆசி பெற வேண்டும் என்று ஆசை.
அந்த ஆசை நேற்று நிறைவேறிவிட்டது.
சென்னை அடையாறு பார்க் ஷெரட்டன் ஹோட்டலுக்கு க்ரிஷ்ஷை வரச் சொன்ன ரஜினி, அவருக்கு ஆசி கூறி உடன் நின்று படமெடுத்துக் கொண்டார்!
சமூக வலைத்தளங்களில் படம் வெளியாகி நேற்று இரவே வைரலானது. பிரபல இயக்குநர் வெங்கட் பிரபு ட்விட்டரில், "மச்சி எக்ஸ்ட்ராடினரிடா... தலைவர எப்போ பாத்த?" என்று ட்விட்டரில் கேட்க, அதற்கு பதிலளித்த க்ரிஷ், "மச்சி இன்னிக்குதான்டா... வாழ்க்கையில் நான் சந்தித்தவர்களிலேயே மிகச் சிறந்த மனிதர்," என்று பதிலளித்துள்ளார்.
Post a Comment