தமிழ்ப் படங்களை தயாரிக்க ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனத்திற்கு தடை?

|

சென்னை: தமிழ்ப் படங்களை தயாரிக்க ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனத்திற்கு தடை விதிக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

இதனை உறுதிப்படுத்துவது போன்று ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் சிஈஓ(CEO) அர்ச்சனா கல்பாத்தி தனது ட்விட்டர் பக்கத்தில் பின் வருமாறு கூறியிருக்கிறார்.

AGS Entertainment Banned From Producing Tamil Movies?

சமீபத்தில் திரைக்கு வந்த தனி ஒருவன் திரைப்படத்திற்கு ஏஜிஎஸ் நிறுவனம் அளவுக்கு அதிகமான விளம்பரம் செய்து வெளியிட்டதால், இனிவரும் காலங்களில் தமிழ்ப் படங்களை தயாரிக்க எங்கள் நிறுவனத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதனைக் கேட்டு நான் அதிர்ச்சி அடைந்தேன்" என்று அர்ச்சனா கல்பாத்தி கூறியிருக்கிறார். தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம்(TFPC) இந்த முடிவை எடுத்திருப்பதாக தெரிகிறது.

இந்தத் தடை ஒரு நிரந்தரத் தடை அல்ல தற்காலிகமானது தான் என்று கூறுகின்றனர். இதுகுறித்து தயாரிப்பாளர்கள் சங்கம் இன்னும் எந்த ஒரு தகவலையும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

 

Post a Comment