ஒரு மனிதரின் அன்புக்காக... இது ரஜினிகாந்த் பற்றி உருவாக்கப்பட்ட ஒரு ஆவண திரைப்படம்.
நெதர்லாண்ட்ஸைச் சேர்ந்த ரிங்கு கல்சி என்பவர் கடந்த நான்கு ஆண்டுகளாக சென்னை மற்றும் தமிழகத்தின் பிற பகுதிகளில் உள்ள ரஜினி ரசிகர்களைச் சந்தித்து, ரஜினியின் படங்கள் வெளியாகும்போது நிலவும் திருவிழா மனநிலை, கொண்டாட்டங்கள், அதன் பின்னணி, ரஜினி என்ற மனிதர் மீதான அன்புக்காக எதையும் செய்யத் தயங்காத ரசிக மனோபாவம் போன்றவற்றை இந்தப் படத்தில் பதிவு செய்துள்ளார்.
இந்த ஆவணப் படமெடுப்பதற்காக தான் பார்த்து வந்த டிவி வேலையை உதறிவிட்டு தமிழகத்துக்கு வந்து தங்கியிருந்தார். பல ரஜினி ரசிகர்கள், மன்ற நிர்வாகிகள் அவருக்கு நண்பர்களாகிவிட்டனர்.
அவரது நண்பர் ஜோயோஜித் பால் இந்த டாகுமென்டரியைத் தயாரித்துள்ளார்.
இந்தப் படம் பெருமைக்குரிய 72வது வெனிஸ் சர்வதேசத் திரைப்பட விழாவில் கடந்த செப்டம்பர் 4-ம் தேதி பிற்பகல் மூன்று மணிக்குத் திரையிடப்பட்டது.
பார்வையாளர்கள் மத்தியில் இந்தப் படத்துக்கு பெரும் வரவேற்பு கிடைத்தது. "ரஜினி என்ற சூப்பர் ஸ்டார் மீது மக்கள் வைத்துள்ள அன்பையும், அவர் புகழையும் உலகுக்குச் சொல்லும் விதமாக For The Love Of A Man படம் அமைந்ததாக" ரிங்கு கல்சி தெரிவித்துள்ளார்.
Post a Comment