இந்திய சினிமாப் படங்கள் தங்களது நாட்டு இளைஞர்கள் மனதைக் கெடுப்பதாக பாகிஸ்தான் எதிர்க்கட்சியான பாகிஸ்தான் முஸ்லீம் லீக் கட்சி நவாஸ்ஷெரீப் பிரிவு எம்.பி.யான தஹீரா ஒளரங்கசீப் குற்றம் சாட்டி, அரசிடமும் புகார் கொடுத்துள்ளார்.
இதுகுறித்து பாகிஸ்தான் கலாச்சாரத்துறை அமைச்சரை சந்தித்து அவர் புகார் கொடுத்தார். இது அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரம் நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்டபோது அங்கும் இந்திய சினிமாவை பல்வேறு கட்சி எம்.பிக்கள் விமர்சித்தனர்.
ஒரு எம்.பி. கூறுகையில், பாகிஸ்தானை இந்திய சினிமாக்கள் ஆக்கிரமித்துள்ளன. ஆனால் பாகிஸ்தானிய படங்களால் இந்தியாவில் அந்த அளவுக்கு ஊடுறுவ முடியாமல் போய் விட்டது வேதனை தருகிறது என்றார்.
இருப்பினும் இந்தியா உள்ளிட்ட பிறநாட்டுப் படங்களை பாகிஸ்தானில் தடை செய்தால் அது திரைப்பட வர்த்தகத்தை பெரிதும் பாதிக்கும் என்றும் அவர்கள் கூறினர்.
பாகிஸ்தான் பிரதமர் கிலானியே ஒரு தீவிர இந்திப் பட பிரியர் என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக ஐஸ்வர்யா ராயையும், லதா மங்கேஷ்கரையும் அவருக்கு ரொம்பப் பிடிக்கும் என்பது நினைவிருக்கலாம்.
இதுகுறித்து பாகிஸ்தான் கலாச்சாரத்துறை அமைச்சரை சந்தித்து அவர் புகார் கொடுத்தார். இது அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரம் நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்டபோது அங்கும் இந்திய சினிமாவை பல்வேறு கட்சி எம்.பிக்கள் விமர்சித்தனர்.
ஒரு எம்.பி. கூறுகையில், பாகிஸ்தானை இந்திய சினிமாக்கள் ஆக்கிரமித்துள்ளன. ஆனால் பாகிஸ்தானிய படங்களால் இந்தியாவில் அந்த அளவுக்கு ஊடுறுவ முடியாமல் போய் விட்டது வேதனை தருகிறது என்றார்.
இருப்பினும் இந்தியா உள்ளிட்ட பிறநாட்டுப் படங்களை பாகிஸ்தானில் தடை செய்தால் அது திரைப்பட வர்த்தகத்தை பெரிதும் பாதிக்கும் என்றும் அவர்கள் கூறினர்.
பாகிஸ்தான் பிரதமர் கிலானியே ஒரு தீவிர இந்திப் பட பிரியர் என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக ஐஸ்வர்யா ராயையும், லதா மங்கேஷ்கரையும் அவருக்கு ரொம்பப் பிடிக்கும் என்பது நினைவிருக்கலாம்.