இனி முழுக்க நனைஞ்சிட வேண்டியதுதான்- இனிப்பு நடிகையின் புதிய முடிவு

அறிமுகம் தமிழில் என்றாலும் இனிப்பு நடிகை புகழ்பெற்றதெல்லாம் ஆந்திரத்தில்தான். அதன்பிறகு கோலிவுட் அவரை கண்டு கொண்டது.

ஆரம்பத்தில் சில படங்கள் ஹிட்டடித்தாலும், அடுத்தடுத்த படங்கள் பெட்டிக்குள் முடங்கியதில் நாயகிக்கு மட்டுமல்ல, கூட சேர்ந்து நடித்த நாயகர்களுக்கும் செம அடி.

போதும்மா உன் சகவாசம் என ஒப்பந்தம் செய்த நாயகர்கள் விலகிக் கொள்ள, இவரோ அவர்கள் கொடுத்த அட்வாட்சை திருப்பித் தர மறுத்ததோடு, ஒரு வாய்ப்பு கொடுங்க, சம்பளத்தைக் குறைச்சு அட்ஜஸ்ட் பண்ணிக்கலாம் என்று ஆஃபர் அறிவித்து வருகிறார்.

இருந்தாலும் நோ யூஸ். பார்த்தார் நடிகை.. கடைசி அஸ்திரத்தை எடுத்துவிட்டார். கவர்ச்சியின் எல்லை எதுவாக இருந்தாலும், அதைத் தொட்டுப் பார்க்க முடிவு செய்துவிட்டாராம்.

கை மேல் பலன்... இரு புதுப் படங்களில் ஒப்பந்தமாகிவிட்டார்.

 

பாஸ் என்கிற பாஸ்கரன் படத்தின் இரண்டாம் பாகத்தைக் கைவிட்டார் ராஜேஷ்

பாஸ் என்கிற பாஸ்கரன் படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கும் முடிவிலிருந்து பின்வாங்கினார் இயக்குநர் ராஜேஷ்.

ஆர்யா, நயன்தாரா, சந்தானம் நடிப்பில் 2010-ம் ஆண்டு வெளியாகி பெரும் வெற்றிப் பெற்ற படம் பாஸ் என்கிற பாஸ்கரன்.

இந்தப் படத்தின் இரண்டாம் பாகத்தை ஆர்யா - தமன்னாவை வைத்து இயக்கப் போவதாக அறிவித்திருந்தார்.

பாஸ் என்கிற பாஸ்கரன் படத்தின் இரண்டாம் பாகத்தைக் கைவிட்டார் ராஜேஷ்

இப்போது இரண்டாம் பாகத்தை எடுக்கும் முடிவை கைவிட்டுவிட்டதாக அறிவித்துள்ளார். அதற்கு பதில் புதிய கதையை இயக்கப் போகிறாராம்.

இரண்டாம் பாகத்துக்கு அறிவிக்கப்பட்ட அதே ஹீரோ ஹீரோயினை வைத்தே புதிய படத்தை இயக்கப் போவதாக தெரிவித்துள்ளார்.

நடிகர் ஆர்யா தன் சொந்தப் பட நிறுவனம் மூலம் தயாரிக்கிறார்.

 

என் பெயர்ல வந்த படமெல்லாம் ஓடுது, ஆனால் என் படம் ஓடலையே: ஹீரோ கவலை

சென்னை: தன் பெயரில் வந்த படம் எல்லாம் ஓடுகிறது ஆனால் தான் நடித்த படம் மட்டும் ஓட மாட்டேன் என்கிறது என்று அந்த 2 எழுத்து ஹீரோ கவலையில் உள்ளாராம்.

பெரிய தயாரிப்பாளரின் மகனான அந்த ஹீரோவுக்கு அண்மை காலமாக படங்கள் ஓடுவது இல்லை. கடந்த 2012ம் ஆண்டு அதுவும் மூன்றில் ஒரு ஹீரோவாக அவர் நடித்த தோஸ்த் படமும், கடந்த ஆண்டு அவர் மோக்கியாவுடன் கூட்டணி வைத்து நடித்த படமும் தான் அண்மையில் அவருக்கு ஓடிய படங்கள். இந்நிலையில் 2 ஆண்டுகளாக அவர் நடித்து வந்த படம் தற்போது ரிலீஸானது.

படம் நிச்சயம் ஹிட்டாகும் என்று நம்பியவருக்கு ஏமாற்றம் தான் மிஞ்சியது. தனது பெயரில் வந்த படம் எல்லாம் ஓடுகிறது ஆனால் தான் நடித்த படம் ஓடவில்லையே என்ற கவலையில் உள்ளாராம் ஹீரோ. பெரிய இயக்குனர்களின் படங்களாக நடித்தது தான் தனக்கு ஹிட் படமே அமையவில்லை என்று நினைத்த ஹீரோ இனி பெரிய இயக்குனர்களின் படத்தில் நடிக்க கூடாது என்று தீர்மானித்துள்ளாராம்.

நடிக்க வந்து இத்தனை ஆண்டுகள் ஆகியும் இன்னும் தன்னால் முன்னணி ஹீரோவாக முடியவில்லை என்ற கவலை வேறு அவருக்கு.