நீதிமன்றத்தில் சரணடைந்த கலாபவன் மணிக்கு ஜாமீன்!

Kalabhavan Mani Gets Bail

சாலக்குடி: வன ஊழியரைத் தாக்கிய வழக்கில் நீதிமன்றத்தில் சரணடைந்த கலாபவன் மணிக்கு ஜாமீன் வழங்கப்பட்டது.

பிரபல மலையாள நடிகர் கலாபவன் மணி கடந்த 15-ந்தேதி கேரளாவில் உள்ள ஆதிரப்பள்ளி வனப்பகுதிக்கு நண்பர்களுடன் போய் வந்து கொண்டிருந்தபோது, வன ஊழியர்கள் இவரது காரை தடுத்து நிறுத்தி சோதனையிட்டனர்.

இதற்கு கலாபவன் மணி எதிர்ப்பு தெரிவித்தார். இதில், கலாபவன் மணிக்கும், வன ஊழியர்களுக்கும் ஏற்பட்ட வாக்குவாதம் கைகலப்பில் முடிந்தது. வன ஊழியர் ரமேஷ் என்பவரை தாக்கியதில் அவர் மூக்குடைந்து ரத்தம் கொட்டியது.

இது குறித்து சாலக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதற்கிடையே இந்த வழக்கு தொடர்பாக கலாபவன் மணி கேரள உயர்நீதிமன்றத்தில் முன் ஜாமீன் கேட்டு மனுதாக்கல் செய்தார்.

மனுவை விசாரித்த நீதிபதி இந்த வழக்கு தொடர்பாக கலாபவன் மணி சாலக்குடி போலீசில் சரண் அடைந்து பின்னர் ஆதிரப்பள்ளி மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஜாமீன் பெற்றுக் கொள்ளும்படி அனுமதி வழங்கியது.

இதையடுத்து கலாபவன் மணி நேற்று பகல் 1.30 மணிக்கு சாலக்குடி போலீஸ் நிலையத்திற்கு சென்றார். அங்கு சர்க்கிள் இன்ஸ்பெக்டர் ஷாஜு முன்பு சரண் அடைந்தார்.

அவரிடம் விசாரணை நடத்திய போலீசார் பின்னர் அவரை போலீஸ் ஜீப்பில் ஏற்றி ஆதிரப்பள்ளி மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். அங்கு அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டது.

 

பிரபல பாடகர் டிஎம் சவுந்திரராஜன் மரணம்!

Tm Soundirarajan Passed Away

சென்னை: இந்தியாவின் மிகச் சிறந்த பின்னணிப் பாடகரும் இசைக் கலைஞருமான டிஎம் சவுந்திரராஜன் இன்று பிற்பகல் சென்னையில் மரணமடைந்தார். அவருக்கு வயது 91.

உடல் நலக் குறைவு காரணமாக இன்று அவர் உயிர் பிரிந்தது. மூச்சுக் கோளாறு காரணமாக கடந்த 12-ந்தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் சில தினங்களுக்கு முன் வீடு திரும்பினார். பேரன் திருமணத்திலும் கலந்து கொண்டார்.

வீட்டில் இருந்தபடியே தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் இன்று பிற்பகல் அவர் சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார்.

1923ம் ஆண்டு மார்ச் 24ம் தேதி மீனாட்சி அய்யங்காரின் மகனாக மதுரையில் பிறந்தார் டி.எம். சவுந்தரராஜன். அவரது இயற்பெயர் துகுலுவ மீனாட்சி அய்யங்கார் சவுந்திரராஜன்.

பிரபல இசை வித்துவான் பூச்சி ஸ்ரீனிவாச அய்யங்காரின் மருமகன் ராஜாமணி அய்யங்காரிடம் இசைப் பயிற்சி பெற்று பல ஆண்டுகளாக மேடை கச்சேரி செய்து வந்தார்.

1950-ம் ஆண்டு கிருஷ்ண விஜயம் படத்தில் 'ராதே உனக்கு கோபம் ஆகாதடி' என்ற பாடலைப் பாடி திரை இசைப்பாடகராக அறிமுகமானார் டி.எம். சவுந்தரராஜன்.

அதன் பிறகு பல்லாயிரம் பாடல்களை பாடி தனது கணீர் கம்பீர குரலால் இசை ரசிகர்களின் இதயங்களில் குடி கொண்டார்.

2003-ம் ஆண்டு பத்மஸ்ரீ விருது பெற்ற இவர், ஏராளமான மாநில அரசின் விருதுகளையும் பெற்றுள்ளார்.

தமிழ் திரையுலக ஜாம்பவான்களான எம்.ஜி.ஆர்., சிவாஜி மற்றும் ஜெமினி கணேசன், எஸ்.எஸ். ராஜேந்திரன், ஜெய்சங்கர், ரவிச்சந்திரன், முத்துராமன், நாகேஷ், ரஜினிகாந்த், கமல்ஹாஸன் என அனைத்து பிரபலங்களுக்கும் குரல் கொடுத்துள்ள டி.எம். சவுந்தரராஜன் ஆயிரக்கணக்கான பக்தி மற்றும் மெல்லிசை பாடல்களையும் பாடியுள்ளார்.

2012-ம் ஆண்டு ஏ.ஆர்.ரகுமான் இசையில் உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டுக்காக உருவான ‘செம்மொழியான தமிழ் மொழியாம்' என்ற பாடல்தான் டி.எம்.சவுந்தரராஜன் குரலில் பதிவான கடைசி பாடல் என்பது குறிப்பிடத்தக்கது.

மறைந்த டி.எம்.சவுந்தரராஜனின் உடல் மந்தைவெளியில் உள்ள அவரது வீட்டில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

திரையுலகைச் சேர்ந்த பல்வேறு கலைஞர்களும், முக்கிய பிரமுகர்களும் அவரது உடலுக்கு மரியாதை செலுத்தி வருகின்றனர்.

டிஎம் சவுந்திரராஜன் மறைவுக்கு முதல்வர் ஜெயலலிதா ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார்.

 

நீதிமன்றத்தில் சரணடைந்த கலாபவன் மணிக்கு ஜாமீன்!

Kalabhavan Mani Gets Bail

சாலக்குடி: வன ஊழியரைத் தாக்கிய வழக்கில் நீதிமன்றத்தில் சரணடைந்த கலாபவன் மணிக்கு ஜாமீன் வழங்கப்பட்டது.

பிரபல மலையாள நடிகர் கலாபவன் மணி கடந்த 15-ந்தேதி கேரளாவில் உள்ள ஆதிரப்பள்ளி வனப்பகுதிக்கு நண்பர்களுடன் போய் வந்து கொண்டிருந்தபோது, வன ஊழியர்கள் இவரது காரை தடுத்து நிறுத்தி சோதனையிட்டனர்.

இதற்கு கலாபவன் மணி எதிர்ப்பு தெரிவித்தார். இதில், கலாபவன் மணிக்கும், வன ஊழியர்களுக்கும் ஏற்பட்ட வாக்குவாதம் கைகலப்பில் முடிந்தது. வன ஊழியர் ரமேஷ் என்பவரை தாக்கியதில் அவர் மூக்குடைந்து ரத்தம் கொட்டியது.

இது குறித்து சாலக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதற்கிடையே இந்த வழக்கு தொடர்பாக கலாபவன் மணி கேரள உயர்நீதிமன்றத்தில் முன் ஜாமீன் கேட்டு மனுதாக்கல் செய்தார்.

மனுவை விசாரித்த நீதிபதி இந்த வழக்கு தொடர்பாக கலாபவன் மணி சாலக்குடி போலீசில் சரண் அடைந்து பின்னர் ஆதிரப்பள்ளி மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஜாமீன் பெற்றுக் கொள்ளும்படி அனுமதி வழங்கியது.

இதையடுத்து கலாபவன் மணி நேற்று பகல் 1.30 மணிக்கு சாலக்குடி போலீஸ் நிலையத்திற்கு சென்றார். அங்கு சர்க்கிள் இன்ஸ்பெக்டர் ஷாஜு முன்பு சரண் அடைந்தார்.

அவரிடம் விசாரணை நடத்திய போலீசார் பின்னர் அவரை போலீஸ் ஜீப்பில் ஏற்றி ஆதிரப்பள்ளி மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். அங்கு அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டது.

 

ஆர்யா - நயன்தாரா படத்துக்கு வாழ்த்து சொன்ன சூப்பர் ஸ்டார்!

Rajini Blesses Arya Nayan Raja Rani

சென்னை: ஆர்யா - நயன்தாரா நடித்த ராஜாராணி படத்துக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

பொதுவாக இந்த மாதிரி படம் வெளியாகும் முன் அவர் வாழ்த்துவது அரிது. இந்தப் படத்துக்கு அந்த பெருமை கிடைத்திருக்கிறது.

காரணம், இந்தப் படத்துக்கு செய்யப்பட்ட பரபர விளம்பரங்கள்.

ஆர்யா - நயன்தாராவிற்கு திருமணம் என்று கூறி அழைப்பிதழ் அனுப்பி பரபரப்பைக் கிளப்பியிருந்தார் படத்தின் இயக்குநர் அட்லீயும் தயாரிப்பாளர் ஏஆர் முருகதாசும்.

பின்னர் ஒரு நிகழ்ச்சியில் படத்தின் ட்ரைலர் வெளியீட்டுக்கான விளம்பரம் அது என்று தெரிவித்தனர். அந்த ட்ரைலருக்கும் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

சமீபத்தில் இயக்குனர் அட்லீயை அழைத்து பேசினாராம் ரஜினி. இது குறித்து இயக்குனர் அட்லீ, "இன்று தலைவர் சூப்பர் ஸ்டார் ரஜினியைச் சந்தித்தேன். சிறிது நேரம் பேசினார். ராஜா ராணி படத்துக்கு வாழ்த்து தெரிவித்தார். என்ன ஒரு அற்புதமான நாள்," என்றார்.

பிடிக்காத இருவர் திருமணம் செய்து கொள்கிறார்கள். இருவருக்குமே காதலி- காதலன் இருக்கிறார்கள். இந்த பொருந்தாத இணை எப்படி பொருந்திப் போகிறது என்பதுதான் ராஜா ராணி கதை.

 

தமிழகத்தில் வெளியாக முடியாத 'செங்கடல்' இப்போது அமெரிக்கா முழுவதும் ரிலீஸ்!

Leena Manimegalai S Sengadal Be Screened In Dallas

டல்லாஸ் (யு.எஸ்): லீனா மணிமேகலை இயக்கிய செங்கடல் திரைப்படம் அமெரிக்கா முழுவதும் தமிழர் அமைப்புகளால் திரையிடப்படுகிறது.

தமிழகத்தில் உருவான செங்கடல் திரைப்படம், தணிக்கைக் குழுவின் தடையை தாண்டி உச்ச நீதிமன்றத்தில் அனுமதி பெற்று வெளிவந்தது. ஆனாலும் தமிழகத்தில் திரையிடப்படவில்லை. செய்தியாளர் காட்சி மட்டுமே திரையிடப்பட்டது.

இப்போது உலகம் முழுவதும் வெவ்வேறு அமைப்புக்களின் உதவியுடன் செங்கடல் திரையிடப்பட்டு வருகிறது.

ஜப்பான் டூ அமெரிக்கா

ஜப்பானிய, கொரிய, சீன, ஃப்ரெஞ்ச் உட்பட 6 மொழிகளில் சப் டைட்டில்களுடன் ஆஃப்ரிக்கா, ஐரோப்பா, ஆசிய நாடுகளில் பல திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டது இந்தப் படம்.

இதுவரையிலும் 30 நாடுகளில் பல்வேறு நகரங்களில், பல்வேறு மொழியை சார்ந்தவர்கள் பார்த்துள்ளனர். மார்ச மாதம் முதல் சுவிட்சர்லாந்து, சுவீடன், டென்மார்க் மற்றும் பிரான்ஸ் உட்பட பல ஐரோப்பிய நகரங்களில் இந்தப் படத்தை திரையிட்டுள்ளனர்.

தற்போது வட அமெரிக்காவில் பல ஊர்களில் செங்கடல் திரையிடப்பட்டு வருகிறது. இன்று சனிக்கிழமை டல்லாஸில, ப்ளேனோ பார்கர் ரோட்டில் உள்ள Tom Muehlenbeck சென்டரில் பிற்பகல் 3 மணிக்கு திரையிடப்பட உள்ளது. இயக்குனர் லீனா மணிமேகலை நேரில் வந்து பார்வையாளர்களுடன் கலந்துரையாடுகிறார்.

டல்லாஸில் இலவச டிக்கெட்டுகள்

டல்லாஸில் AHCRL அமைப்பு சார்பில் வழங்கப்படும் இலவச டிக்கெட்டுகளுக்கு 972-821-1474 / 9725109214 என்ற தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம். AHCRL (Association for Human Rights and Civil Liberties) அமைப்பு, உலகம் முழுவதும் நடைபெறும் மனித உரிமை மீறல்களுக்கு எதிராக குரல் கொடுத்து வரும் ஒரு தன்னார்வ தொண்டு நிறுவனமாகும். டல்லாஸ் கிளை சார்பில் செங்கடல் திரைப்படம் வெளியிடப்படுகிறது.

ஞாயிற்றுக்கிழமை ஹூஸ்டனிலும், தொடர்ந்து அடுத்தடுத்த வாரங்களில் சின்சினாட்டி, டெட்ராய்ட், சான் ஃபிரான்சிஸ்கோ, சான் ஓசே, டொரோண்டோ நகரங்களில் செங்கடல் வெளியாகிறது. அனைத்து ஊர்களிலும் லீனா மணிமேகலை பார்வையாளர்களைச் சந்திக்கிறார்.

பல்கலைக்கழகங்களில்...

முன்னதாக லீனா மணிமேகலைக்கு சிகாகோ பல்கலைக்கழகம் அழைப்பு விடுத்திருந்தது. பல்கலைகழக வளாகத்தில் செங்கடல் திரையிடவும் செய்தார்கள். மேலும் நியூயார்க் இன்டெர்னேஷனல் சென்டர் மற்றும் கொலம்பியா பல்கலைக் கழகமும் லீனாவை கௌரவித்து, படத்தையும் திரையிட்டார்கள். இங்கு வந்திருந்த பார்வையாளர்கள் அனைவரும் அமெரிக்கர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ்த்திரைப்பட வரலாற்றில் முதன்முறையாக, பார்வையாளர்கள் பங்கேற்பு திட்ட்த்தின் (Crowd Funding) மூலம் http://www.indiegogo.com இணையதளத்திலும் செங்கடல் வெளியாகியுள்ளது என்பதுவும் குறிப்பிடத்தக்கது.

தமிழகத்தில் ஈழ மக்கள் அகதிகளாகப் படும் அவதிகளை ஆவணப் படமாக்கச் செல்லும் ஒரு ஊடகவியலாளரின் பார்வையில் ஈழப் போராட்டத்தைச் சொல்லும் படம்தான் இந்த செங்கடல். தோல்பாவை தியேட்டர்ஸ் சார்பில் தயாரிக்கப்பட்ட இந்தப் படம்தான் லீனா மணிமேகலையின் முதல் திரைப்படம்.

 

இளையராஜா கையாலதான் எங்களுக்கு பணிநியமன ஆணை வேணும்! - அடம்பிடித்து சாதித்த மாணவர்கள்

Students Adamant Receive Appointment Ilayarajaa

இசைஞானி இளையராஜாவின் கையால்தான் எங்களுக்கு கல்விச் சான்றிதழ் வேண்டும் என தனியார் பொறியியல் கல்லூரி மாணவர்கள் அடம் பிடித்ததால், அவர்களுக்கு தனது ஸ்டுடியோவில் வைத்து சான்றிதழ் வழங்கினார் இளையராஜா.

தலைமுறைகளைத் தாண்டிய இசையைத் தந்தவர் இசைஞானி இளையராஜா. அவரது பாடல்களை கருவிலிருக்கும்போதே அதிகமாக கேட்டதாலோ என்னமோ, இப்போது பிறந்த பிள்ளைகள் கூட ராஜா பாட்டுக்கு தாளம் போடுகிறார்கள்.

இந்த 38 ஆண்டுகளில் எத்தனையோ இசையமைப்பாளர்கள் வந்துபோனாலும், இளையராஜா மட்டுமே இசையமைப்பாளர்களில் ராஜாவாக கோலோச்சுகிறார்.

இன்றைய தலைமுறை மத்தியில் அவரது ஆளுமை எப்படி இருக்கிறது என்பதை உணர்த்தும் வகையில் சமீபத்தில் ஒரு நிகழ்ச்சி நடந்தது.

சென்னையில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் படிக்கும் 50க்கும் மேற்பட்ட மாணவர்கள் சமீபத்தில் இளையராஜாவின் இசைப் பதிவுக் கூடம் உள்ள பிரசாத் ஸ்டுடியோவுக்கு வந்திருக்கிறார்கள்.

அந்தக் கல்லூரியில் பட்டம் பெற்று, கல்லூரி மூலமே பணிக்கான நியமன ஆணையையும் பெற்றுள்ளனர் மாணவர்கள். ஆனால் அந்த ஆணையை இசைஞானி இளையராஜா கைகளால் பெற்றால் பெரிய ஆசீர்வாதம் கிடைத்த மாதிரி இருக்கும் என்று கருதினர்.

இது சாத்தியமா? அவர் சம்மதிப்பாரா? என நிர்வாகத்தினர் கேட்டபோது, "நாங்கள் எல்லோருமே நேரில் போய் அவரைப் பார்க்கிறோம். அவர் சம்மதித்தால் சந்தோஷமாக பெற்றுக் கொள்கிறோம். இல்லாவிட்டால் நேரில் அவரைப் பார்த்து ஆசி பெற்றுக் கொள்வோம்," என்று கூறிவிட்டு வந்தார்களாம்.

ஆனால் மாணவர்களை ஏமாற்றுவாரா ராஜா? வந்த அத்தனை பேரையும் உள்ளே அழைத்து, அவர்கள் ஒவ்வொருவருக்கும் பணி நியமன ஆணை கொடுத்து படம் எடுத்துக் கொண்ட பிறகே அனுப்பி வைத்தாராம்.

சம்பந்தப்பட்ட கல்லூரி அதை பெரிய விளம்பரமாக்கிக் கொண்டது தனிக் கதை!!

 

வசதியான தொழிலதிபரைப் பிடித்த லட்சுமி ராய்!

Lakshmi Rai Marry An Industrialist

சென்னை: நடிகைகளுக்கே உரிய மரபுப்படி, ஒரு வசதியான தொழிலதிபரை தன் காதலில் வீழ்த்தியுள்ளார் லட்சுமிராய்.

இதை அவரே வெளிப்படையாக அறிவித்தும் உள்ளார்.

தமிழ், தெலுங்கு என முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து வருபவர் லட்சுமிராய். சமீபத்தில் ஐபிஎல் சூதாட்டத்தில் இவரது பெயர் அடிபட்டது.

இது குறித்து லட்சுமிராயிடம் கேட்டால், "எனக்கேற்ற காதலனை நான் தேர்வு செய்துவிட்டேன். கடந்த ஓராண்டுக்கும் மேலாக நாங்கள் பழகி வருகிறோம். அவர் ஒரு தொழில் அதிபர். ஜாலியாக, நட்பு முறையில் பழகுபவர், நல்ல மனம் படைத்தவர். அவர் யார்? என்று கேட்கிறார்கள்.

தென்னிந்தியாவை சேர்ந்தவர். யார் என்பதை விரைவில் தெரிவிப்பேன். இவரை போன்ற ஒருவரைத்தான் வாழ்க்கைத் துணையாக அடைய வேண்டும் என்று எண்ணி இருந்தேன். நான் நடித்த சில படங்களை அவர் பார்த்திருக்கிறார். அவருக்கு பிடித்திருந்தது. ஆனால் அவர் சினிமா பைத்தியம் அல்ல.

எனது திருமணம் 2 ஆண்டு கழித்து நடக்கும். திருமணத்துக்கு பிறகு கணவருடன் தொழில் பார்ட்னர் ஆவேனா, தொடர்ந்து நடிப்பேனா என்பது பற்றி இன்னும் முடிவு செய்யவில்லை.

சமீபகாலமாக கிரிக்கெட் வீரர்களுடன் என்னை தொடர்புபடுத்தி கேள்வி கேட்கிறார்கள். யாருடனும் எனக்கு இப்போது தொடர்பு இல்லை. சொல்லப் போனால் இந்தியாவில் கிரிக்கெட் போட்டிக்கு தரும் முக்கியத்துவத்தை நமது தேசிய விளையாட்டான ஹாக்கிக்கு தருவதில்லை என்பது வருத்தம் அளிக்கிறது," என்றார்.

ஐபிஎல் சூதாட்டத்தில் தன் பெயர் பலமாக அடிபடுவதை்த தவிர்க்க, எப்படியெல்லாம் பேச வேண்டியிருக்கிறது!

 

பவர்ஸ்டார் நடிச்ச இரும்பு கம்பி விளம்பரத்தை காணோமே!

Power Star Advertisement Not Telecast On Television

மோசடி வழக்கில் சிக்கி ஜெயிலுக்குப் போனதால் பவர் ஸ்டார் சீனிவாசன்நடித்த இரும்புக் கம்பி விளம்பத்தை டிவியில் ஒளிபரப்பாமல் நிறுத்தி வைத்துள்ளனர்.

சொந்த காசை செலவழித்து விளம்பரம் தேடிக் கொண்டவர் டாக்டர் சீனிவாசன். தனக்குத் தானே பவர்ஸ்டார் என்ற பட்டமும் கொடுத்துக் கொண்டார்.

கடன் வாங்கித் தருவதாக கமிசன் வாங்கிக் கொண்டு மோசடி செய்துவிட்டதாக இவர் மீது ஏராளமான புகார்கள் குவிந்துள்ளன. கண்ணா லட்டு தின்ன ஆசையா படம் ஓடியதால் அடுத்தடுத்து படங்கள் புக் ஆனது.

நமீதாவை வைத்து விளம்பரப்படம் எடுத்த இரும்புக் கம்பி நிறுவனம் ஒன்று பவர்ஸ்டாரையும் ஜோடியாக்கி விளம்பரத்திற்கு ஒப்பந்தம் செய்தது. பில்டிங்கும் ஸ்ட்ராங், பேஸ்மட்டமும் ஸ்ட்ராங் என்று டயலாக் பேசினார் பவர் ஸ்டார் சீனிவாசன். அடுக்கடுக்காக மோசடிப் புகார் குவிந்து பவர்ஸ்டார் உள்ளே போகவே கடைசியில் விளம்பரத்தை டிவியில் ஒளிபரப்புவதை நிறுத்திவிட்டனர்.

தரமான கம்பி என்று விளம்பரப்படுத்தப்படும் அந்த விளம்பரத்தில் மோசடி நபர் சொன்னால் மக்கள் வாங்குவார்களா? என்று அந்த நிறுவனம் நினைத்ததே காரணம் என்று கூறப்படுகிறது.

 

கும்பகோணத்தில் பிறந்தநாள் கொண்டாடும் கார்த்தி: அன்னதானம்… ரத்ததானம் ரசிகர்கள் ஜோர்

Karthi Spend B Day On All All Azhagu Raja Sets

சென்னை: நடிகர் கார்த்தி தனது பிறந்த தினத்தை கும்பகோணத்தில் எளிமையாக கொண்டாடப் போவதாக கூறியுள்ளார்.

மே 25 நடிகர் கார்த்தியின் பிறந்தநாளாகும். இதனையொட்டி சென்னையில் கார்த்தி ரசிகர்கள் நலத்திட்ட பணிகளுக்கு், ஏழைகளுக்கு உதவிகள் வழங்கும் நிகழ்ச்சிக்கும் ஏற்பாடு செய்கின்றனர்.

வடசென்னையில் கார்த்தி ரசிகர்கள் 1000 பேர் ரத்ததானம் செய்கின்றனர். எழில் நகர் பி.வி. காலனியில் சமபந்தி விருந்து நடக்கிறது. 2 ஆயிரம் பேருக்கு அன்ன தானம் வழங்கப்படுகிறது.

தங்க மோதிரம் பரிசு

திருவள்ளூரில் அரசு ஆஸ்பத்திரியில் பிறக்கும் 10 குழந்தைகளுக்கு தங்க மோதிரம் அணிவிக்கப்படுகிறது. இதற்கான ஏறபாடுகளை கே.இ.ஞானவேல் ராஜா, தலைமையில் ரசிகர்கள் வழங்குகின்றன.

கும்பகோணத்தில் கார்த்தி

கார்த்தி தற்போது கும்பகோணத்தில் ஆல் இன் ஆல் படப்பிடிப்பில் பங்கேற்று நடித்து வருகிறார். படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து கொண்டு இருக்கிறது எனவே லீவ் போடாமல் படப்பிடிப்பு அரங்கில் எளிமையாக பிறந்தநாளை கொண்டாடுவேன் என்று கூறியுள்ளார் கார்த்தி.