நறுக் நறுக்கென பேசும் அருக்காணியின் ஆசை என்ன தெரியுமா...?

சன்டிவியில் ஒளிபரப்பாகும் ‘வம்சம்' டிவி சீரியலை நிறுத்தச் சொல்லி நூற்றுக்கணக்கான கண்டனக்குரல்கள் கேட்டாலும் அந்த சீரியலில் நடிக்கும் சில கதாபாத்திரங்களை யாராலும் மறுக்க முடியாது.

அதில் நடிக்கும் ரம்யா கிருஷ்ணனை விட வெகுளித்தனமாய் நடித்து வில்லத்தனம் செய்யும் ரமாமணி... மாமா, மாமா என்று சுற்றி வரும் அருக்காணி... மச்சான் மச்சான் என்று உருகும் பூமிகா... குட்டிப்பெண் சங்கரி என சில கதாபாத்திரங்கள் வம்சம் சீரியலுக்கு சுவாரஸ்யத்தை அதிகரிக்கின்றன.

'Arukkani' opens her mind

அருக்காணி

அருக்காணிக்கு இல்லத்தரசிகளிடையே தனி வரவேற்பு இருக்கத்தான் செய்கிறது. அருக்காணி சின்னத்திரையில் நடிப்பது இதுதான் முதல் சீரியல். சினிமாவில் இரண்டு படங்களில் நடித்துள்ளார். நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் குரூப் டான்சராக பணியாற்றியுள்ளாராம்.

'Arukkani' opens her mind

வடசென்னைப் பெண்

எஸ்.எஸ்.எல்.சி மட்டுமே படித்துள்ள அருக்காணியின் உண்மையான பெயர் சிந்துக்கிருஷ்ணன். கணவர் ஹரி கிருஷ்ணனுடன் இணைந்து நடனப்பள்ளி நடத்துகிறார்.

பிரபல நடன இயக்குநர்களிடம்

காயத்ரி ரகுராம், ஸ்ரீதரன், சுஜாதா, லாரன்ஸ் என பலரிடமும் உதவியாளராக பணிபுரிந்துள்ளாராம் அருக்காணி. ‘டான்ஸா இன்ஸ்டிட்யூட் ஆஃப் மாடல் டான்ஸ்' என்கிற நடனப் பள்ளியை நடத்தி வருகிறாராம்.

காமெடி நடிகையாக நடிக்கணும்

‘வத்திக்குச்சி' படத்தில் அஞ்சலிக்கு தோழி, ‘ஆலமரம்' படத்தில் போலீஸ் என தொடர்ந்து சினிமாவிலும் நடித்து வரும் அருக்காணிக்கு நல்ல காமெடி நடிகையாக சினிமாவில் நிலைக்கவேண்டும் என்பதுதான் ஆசையாம்.

 

மணிரத்தினத்தை நேரில் அழைத்து... கெளரவிக்கும் நியூயார்க் மியூசியம்

சென்னை: இந்தியாவின் முக்கியமான இயக்குநர்களில் ஒருவரான மணிரத்தினத்திற்கு, நியூயார்க்கில் உள்ள மியூசியம் ஆப் தி மூவிங் இமேஜ் என்ற அருங்காட்சியகம் நேரில் அழைத்துக் கெளரவப்படுத்தவுள்ளது.

59 வயதாகும் மணிரத்தினம் மிக முக்கியமான இயக்குநர் என்று அந்த மியூசியம் புகழாரம் சூட்டியுள்ளது. இந்த கெளரவமானது நீண்ட காலத்திற்கு முன்பே செய்திருக்க வேண்டியது. தாமதமாக தற்போது நடைபெறவுள்ளதாக அந்த மியூசியத்தின் இயக்குநர் ரிச்சர் பெனா கூறியுள்ளார்.

Maniratnam to be honoured by NY museum

ஜூலை 31 முதல் ஆகஸ்ட் 2ம் தேதி வரை மணிரத்தினம் இந்த மியூசியத்தின் நிகழ்ச்சிகளில் பங்கேற்பார். இந்த நாட்களில் அவர் இயக்கிய ரோஜா, பாம்பே, தில் சே ஆகிய படங்கள் திரையிடப்படும்.

மிகவும் அரிய வகை இயக்குநர் மணிரத்தினம். மிகச் சிறந்த படங்களை உருவாக்கும் திறமை படைத்தவர். புத்திசாலியான இயக்குநரும் கூட என்றும் அந்த மியூசியம் வர்ணித்துள்ளது.

சமூகத்தின் அனைத்துத் தரப்பினரையும் திருப்தி அடையச் செய்பவர் மணிரத்தினம் என்றும் ரிச்சர்ட் பெனா கூறியுள்ளார்.

 

நடிகர் சங்கத்திலிருந்து நாடக நடிகர்களை நீக்க வேண்டும் - மன்சூர் அலிகான்

நடிகர் சங்கத்தில் இருந்து நாடக நடிகர்களை நீக்க வேண்டும் என்று மன்சூர் அலிகான் கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், "ராதாரவியும் காளையும் திருச்சியில் நடந்த கூட்டமொன்றில் சினிமாக்கார நாய்கள் என்று பேசி உள்ளனர். விஷாலையும், நாசரையும் திட்டி உள்ளனர்.

நடிகர்களை நாய்கள் என்று பேசிய ராதாரவியும், காளையும் நடிகர் சங்க தேர்தலில் போட்டியிட தகுதி இல்லாதவர்கள். எனவே இவர்கள் தேர்தலில் போட்டியிடுவதை எதிர்த்து கோர்ட்டில் வழக்கு தொடர இருக்கிறேன்.

Mansoor Ali Khan urges to remove drama artists from Nadigar Sangam

நடிகர் சங்கத்தில் மூவாயிரம் நாடக நடிகர்கள் உறுப்பினர்களாக இருக்கிறார்கள். இப்போது நாடகம் எங்கே நடக்கிறது... இவர்களை ஏன் உறுப்பினர்களாக வைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

சங்கத்தில் இருந்து அனைத்து நாடக நடிகர்களையும் நீக்க வேண்டும். அவர்களுக்கு பதிலாக சினிமா நடிகர்களை மட்டும் உறுப்பினர்களாக்க வேண்டும். நாடக நடிகர்களை நீக்கி விட்டுத்தான் தேர்தலை நடத்த வேண்டும். இந்த நாடக நடிகர்களை வைத்துக் கொண்டுதான் தேர்தல் முடிவுகளை தங்கள் இஷ்டப்படி மாற்றுகிறார்கள்.

நடிகர் சங்கத்தில் தலைவர் நல்லவர். அவரை யாரும் எதிர்க்கவில்லை. ராதாரவி, காளையைத்தான் எதிர்க்கிறோம்.

நடிகர் - நடிகைகளுக்கு மத்திய அரசு விதித்த சேவை வரியை கண்டித்து வள்ளுவர் கோட்டத்தில் நடிகர்கள் உண்ணாவிரத போராட்டம் நடத்தினர். அதற்கு ரூ. 11 லட்சத்து 80 ஆயிரம் செலவு ஆனதாக ராதாரவி கணக்கு எழுதி உள்ளார். இவ்வளவு செலவு செய்ததற்கு பதிலாக பேசாமல் சேவை வரியையே கட்டி இருக்கலாம்.

நடிகர்-நடிகைகளுக்கு நடிப்பு திறன் வளர்க்கும் பயிற்சிக்கு ரூ. 33 லட்சம் செலவானதாக கணக்கு காட்டி உள்ளார். ராதாரவி யாருக்கு நடிப்பு திறன் பயிற்சி அளித்தார் என்பதை எனக்கு தெரிவிக்க வேண்டும்," என்றார்.

 

நயன்தாரா கிராமத்துப் பெண்ணாக நடிக்கும் திருநாள்!

நீண்ட இடைவெளிக்குப் பிறகு திருநாள் படத்தில் கிராமத்துப் பெண் வேடத்தில் நடிக்கிறார் நயன்தாரா.

‘ஈ' படத்திற்கு பின் இந்தப் படத்தில்தான் ஜீவா, நயன்தாரா மீண்டும் இணைந்து நடிக்கிறார்கள்.

Nayanthara to play folk girl in Thirunaal

கும்பகோணம் மற்றும் அதைச்சுற்றியுள்ள பகுதிகளில் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. முரட்டுத்தனமான கிராமத்து இளைஞனாக ஜீவா நடித்து வரும் இப்படத்தை பி.எஸ்.ராம்நாத் இயக்கி வருகிறார்.

நீண்ட இடைவெளிக்குப்பின் நடிகை நயன்தாரா, இப்படத்திலேயே கிராமத்து பெண்ணாக நடிப்பது குறிப்பிடத்தக்கது. காமெடியுடன் காதலும், ஆக்ஷனும் கலந்த இப்படத்திற்காக கும்பகோணத்தில் மிகுந்த பொருட்செலவில் அமைக்கப்பட்டுள்ள பிரம்மாண்ட அரங்கில் தினமும் ஆயிரம் துணைநடிகர்கள் நடிக்க, படத்தின் முக்கிய காட்சிகள் விறுவிறுப்பாக படமாக்கப்பட்டு வருகின்றன.

Nayanthara to play folk girl in Thirunaal

ஜூன் முதல்வாரமே நயன்தாரா கலந்துகொள்வதாகச் சொல்லப்பட்டது. ஆனால் சொன்ன தேதியில் அவர் படப்பிடிப்பில் கலந்துகொள்ளவில்லை. ஏனெனில் போடா போடி இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கிவரும் நானும் ரவுடி தான் படத்தின் படப்பிடிப்பில் பிஸியாக இருந்ததால் நயன்தாரா இப்படத்திற்கான படப்பிடிப்பிற்கு வர தாமதமானது.

கோதண்டபாணி பிலிம்ஸ் நிறுவனத்தின் சார்பில் எம்.செந்தில்குமார் இப்படத்தை தயாரித்து வருகிறார்.

படத்துக்கு இசை - ஸ்ரீ, ஒளிப்பதிவு - மகேஷ் முத்துசாமி, எடிட்டிங் - வி.டி.விஜயன்.

 

பாகுபலி அமெரிக்க - கனடா உரிமையைப் பெற்றது ப்ளூ ஸ்கை சினிமா

பாகுபலி படத்தின் கனடா - அமெரிக்கா தமிழ்ப் பதிப்பு வெளியீட்டு உரிமையை ப்ளூ ஸ்கை சினிமா நிறுவனம் பெற்றுள்ளது.

எஸ்எஸ் ராஜமவுலி இயக்கியுள்ள பாகுபலி படத்தின் வெளியீட்டை உலகெங்கும் உள்ள சினிமா ரசிகர்கள் ஆவலுடன் எதிர்நோக்கிக் காத்துள்ளனர்.

Blu Sky snaps Bahubali Tamil releasing rights in USA- Canada

இந்தப் படத்தின் தமிழ்ப் பதிப்பை ஸ்டுடியோ கிரீன் வெளியிடுகிறது. அமெரிக்கா மற்றும் கனடா பகுதிகளில் தமிழ்ப் பதிப்பை ப்ளூ ஸ்கை சினிமா நிறுவனம் வெளியிடுகிறது.

இந்தப் படத்தின் தெலுங்கு, இந்தி, மலையாளப் பதிப்புகளை உலகெங்கும் வெளியிடும் உரிமை மற்றும் தொலைக்காட்சி, இணையதள வெளியீட்டு உரிமையையும் ப்ளூ ஸ்கை நிறுவனமே பெற்றுள்ளது.

ஜூலை 10-ம் தேதி வெளியாகும் இப்படத்தின், சிறப்புக் காட்சி 9-ம் தேதி திரையிடப்படுகிறது.

 

மனித உணர்வுகளின் “ரீங்காரம்”!

சென்னை: மனிதர்களின் உணர்வுகளைப் பற்றி பேசும் ஒரு படம்தான் ரீங்காரம் என்று படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

ஹரி இயக்கிய "சேவல்" வெற்றிப் படத்தை தயாரித்த ஜே.ஸ்டுடியோஸ் ஜின்னா தயாரிக்கும் படம் "ரீங்காரம்".

இப்படத்தை இயக்குபவர் சிவகார்த்திக். ஒளிப்பதிவு இனியன் ஹரிஸ். இசை அலிமிர்ஷா.

“Reengaram” the film about human emotions

உண்மையானக் கதையாம்:

வட சென்னையில் நடந்த உண்மைச் சம்பவத்தினைப் பின்னணியாக வைத்து திருச்சியைக் கதைக் களமாக வைத்து படம் உருவாகியிருக்கிறதாம். படத்தின் கதையை விட அதன் திரைக்கதை வடிவத்தால் ஈர்க்கப்பட்டே படம் தயாரிக்க முன்வந்ததாகக் கூறுகிறார் தயாரிப்பாளர் ஜின்னா.

மொத்தமே இரண்டு பாடல்கள்:

இது ஒரு நாளில் நடக்கும் கதை. கதையின் விறு விறுப்புக்கும், வேகத்துக்கும் வேகத்தடை வேண்டாம் என்று படத்தில் இரண்டே பாடல்கள்தானாம்.

நட்சத்திரப் பட்டாளம்:

பாலா என்கிற புதுமுகம் நாயகனாகவும், பிரியாங்கா நாயகியகாவும் நடித்துள்ளனர். கலாபவன் மணி, ஜெயபாலன் நடித்துள்ளனர். வில்லனாக கலாபவன் மணி நடித்துள்ளார். சிங்கப்பூர் தீபன் காமெடியனாக நடித்துள்ளார்.

சிரிப்பும், அழுகையும்:

படம் பற்றி இயக்குனர் கூறுகையில், "மனிதன் அவன் வாழ்நாளில் கடக்கிற ஒட்டு மொத்த உணர்வுகளையும் நிகழ்வுகளையும் இரண்டே விஷயத்தில் தெளிவாகச் சொல்லி விடலாம். ஒன்று சிரிப்பு இன்னொன்று அழுகை.

மனித உணர்வுகளின் பிரதிபலிப்பு:

இந்த இரண்டு விதமான உணர்வுகளையும் சரிவர பயணம் செய்து பார்த்த மனிதர்களிடமிருந்தும் படித்த புத்தகங்களிடமிருந்தும் எடுத்து சொல்லியிருக்கிறேன்.

இயல்பு மாறாத நடிப்பு:

ஒவ்வொருவரும் இயல்பு மீறாமல் யதார்த்தம் கெடாமல் நடித்திருக்கிறார்கள். கதாநாயகனாக புதுமுகம் பாலா. அவர் வேலையை சரியாக செய்து யதார்த்தத்துக்கு பலம் சேர்த்திருக்கிறார்.

இறுதிகட்ட பணியில்:

இதுவரை 25 நாட்களில் தொடர்ந்து படப்பிடிப்பு நடத்தி பெரும்பகுதியை முடித்துள்ள இப்படக்குழுவினர், தற்போது இறுதிக்கட்டப் பணியில் இருக்கிறார்கள்.

 

கதாநாயகனாகும் ராகவா லாரன்ஸ் தம்பி எல்வின்!

ராகவா லாரன்ஸின் தம்பி எல்வின் இப்போது நாயகனாக அறிமுகமாகிறார்.

சமீபத்தில் திரைக்கு வந்து மாபெரும் வெற்றிபெற்ற காஞ்சனா - 2 படத்தில் இடம் பெற்ற சில்லாட்ட பில்லாட்ட.. என்ற பாடலில் ராகவா லாரன்ஸ் 'கூப்பிட்றா தம்பிய..' என்றதும் புயல் போல நடனமாடி அறிமுகமானாரே.. அவர்தான் எல்வின்.

Raghava Lawrence brother Elvin turns hero in Tamil movie

அப்போதே அடுத்து இவர் ஹீரோவாக வரப் போகிறார் என்பது புரிந்துவிட்டது. இப்போது நிறைய இளம் இயக்குனர்கள் அவருக்கு கதை சொல்லி வருகிறார்களாம்.

தம்பிக்குப் பொருத்தமான கதையை ராகவா லாரன்ஸே தேர்வு செய்து வருகிறார்.

Raghava Lawrence brother Elvin turns hero in Tamil movie

நடனம் மட்டும் இல்லாமல் சிக்ஸ் பேக் உடற்கட்டுடன் நாயகனுக்கான அனைத்து பயிற்சிகளிலும் தனது சகோதரரை ஈடுபடுத்தி வருகிறார் லாரன்ஸ்.

படத்தின் தலைப்பு மற்றும் விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும் என்றார் ராகவா லாரன்ஸ்.

 

பிழைப்பது சென்னையில்.. பழிப்பது தமிழ் நடிகர்களை.. இது நடிகர் சுரேஷின் சின்னபுத்தி!

எண்பதுகளில் தமிழின் அதிகபட்ச ப்ளாப் படங்களில் நடித்த ஹீரோ என்றால் அது அநேகமாக சுரேஷாகத்தான் இருக்கும் (பன்னீர் புஷ்பங்கள், கோழி கூவுது தவிர).

படத்திலும் நிஜத்திலும் இவரைப் போல வழிசல் ஆசாமிகள் யாரும் இல்லை எனும் அளவுக்கு 'நல்ல பெயர்.' நான்கு திருமணங்கள் செய்து, நான்கிலும் தோற்ற இவர், இப்போது குப்பைக் கொட்டிக் கொண்டிருப்பதும் சென்னையில்தான்.

ஆனால் இவருக்கு தமிழ் நடிகர்கள் மீது ஏனோ அத்தனை வெறுப்பு, பொறாமை. அதை சமீபத்தில் ட்விட்டரில் வெளிப்படுத்தியிருந்தார்.

Actor Suresh spit venom against Tamil actors

சமீபத்தில் பாகுபலி ட்ரைலர் வெளியாகி, சினிமா உலகையே கலக்கிக் கொண்டிருக்கிறது. அதில் சத்யராஜ், நாசர் என தமிழ் முகங்களைப் பார்த்து கடுப்பாகி கண்டபடி எழுதியிருக்கிறார் சுரேஷ்.

"ராஜமவுலியின் `பாகுபலி` படத்துக்கு எனது ஆதரவு இல்லை. ஏனெனில் எத்தனையோ நல்ல தெலுங்கு குணச்சித்திர நடிகர்கள் இருக்க, தமிழ் நடிகர்களான நாசரையும் சத்தியராஜையும் நடிக்க வைக்க வேண்டிய அவசியமென்ன?"

-இதுதான் ட்விட்டரில் அவர் கக்கியுள்ள விஷம். இதனை தெலுங்கு நடிகர்கள், ரசிகர்களே கூட விரும்பவில்லை. காரணம் அவர்களுக்கே தெரியும்... தமிழ் சினிமாவில் அவர்கள் எந்த அளவு செல்வாக்குடன் திகழ்கிறார்கள் என்று. அதனால்தான் சுரேஷை ட்விட்டரில் இப்போது வெளுத்து வாங்கிக் கொண்டிருக்கிறார்கள்.

சுரேஷுக்கு இந்த ரிட்டயர்மென்ட் காலத்திலும் வில்லன், குணச்சித்திர வேடங்கள் என கை கொடுத்துக் கொண்டிருப்பது தமிழ் சினிமாதான். இன்றைக்கும் விஜய் டிவியில் சமையல் நிகழ்ச்சி ஒன்றை நடத்திக் கொண்டிருக்கிறார் இதே சுரேஷ்.

பாகுபலி படத்தை எடுத்த எஸ்எஸ் ராஜமவுலி சென்னையில் பிறந்து, சென்னையில் வளர்ந்து, சென்னையில் படித்து, சென்னையில் சினிமா கற்று ஆந்திரா போனவர். ஆந்திராவில் சினிமா எடுத்தாலும், தமிழ் ரசிகர்களை மறக்காமல், பாகுபலியை நேரடி தமிழ்ப் படமாக உருவாக்கியிருக்கிறார். பிரபாஸையும், ராணாவையும் அனுஷ்காவையும் தமிழ் வசனங்கள் பேசி நடிக்க வைத்துள்ளார்.

ஆனால் இந்த சுரேஷ் ஆந்திராவில் பிறந்து தமிழ் சினிமாவில் சம்பாதித்து இன்னும் இங்கேயே காலம் தள்ளிக் கொண்டு தமிழ் நடிகர்களைப் பழித்திருக்கிறார்.

இது போன்ற நபர்களை இனியும் தாங்கிப் பிடிக்கப் போகிறதா தமிழ் சினிமாவும் நடிகர் சங்கமும்?

 

ஜூலை 3ம் தேதி பாலக்காட்டு மாதவன் "காமெடி ராக்கெட்" தியேட்டர்களில் ஏவப்படுகிறது!

சென்னை: விவேக் நாயகனாக நடித்துள்ள படம் பாலக்காட்டு மாதவன், வரும் ஜூலை 3ம் தேதி ரிலீசாக உள்ளது.

சந்திர மோகன் இயக்கத்தில் விவேக் நாயகனாக நடித்துள்ள படம் பாலக்காட்டு மாதவன். இப்படத்தில் சோனியா அகர்வால் விவேக்கிற்கு ஜோடியாக நடித்துள்ளார்.

Palakkad Madhavan to hit screens on July 3

குடும்பக் கதை பிளஸ் காமெடிப் படமாக உருவாகியுள்ள இப்படத்தின் பாடல்கள் சமீபத்தில் வெளியானது. சென்சாரில் இப்படத்திற்கு யு சான்றிதழ் தரப்பட்டுள்ளது.

Palakkad Madhavan to hit screens on July 3

இப்படம் முன்னதாக இம்மாதம் 26ம் தேதி ரிலீஸ் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது, ரிலீஸ் தேதி ஜூலை 3ம் தேதிக்கு தள்ளி வைக்கப் பட்டுள்ளது.

இப்படத்தின் டிரைலர் மற்றும் இசைக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. எனவே, படம் குறித்த எதிர்பார்ப்பு மக்களிடையே அதிகமாக உள்ளது.

ஏற்கனவே, நான் தான் பாலா படத்தில் விவேக் ஹீரோவாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

ஒரு பப்பாளியே பப்பாளி டயட்டில் உள்ளதே!

சென்னை: நடிகை சோனா உடல் எடையை குறைக்க, தோலை மினுமினுப்பாக வைத்துக் கொள்ள பப்பாளி டயட்டில் உள்ளாராம்.

படங்களில் கவர்ச்சி காட்டி நடித்து வருபவர் சோனா. நடிப்பது தவிர்த்து அவர் தொழில் அதிபராகவும் உள்ளார். சென்னை பெண்ணான சோனா அவ்வப்போது சர்ச்சையில் சிக்கியதால் மக்கள் அவரைப் பற்றி அதிகம் பேசினர்.

சோனா என்றால் கொழுக் மொழுக் என்ற அவரது உருவம் தான் நினைவுக்கு வரும். இந்நிலையில் குண்டாக இருப்பது அவருக்கே போர் அடித்துவிட்டது போல. அதனால் டயட்டில் குதித்துவிட்டார். பப்பாளிப் பழ டயட்டில் இறங்கியுள்ளார் சோனா. பார்த்திபன் ஸ்டைலில் சொன்னால் ஒரு பப்பாளியே பப்பாளி சாப்பிடுகிறதே அடடே ஆச்சரியக்குறி.

இந்நிலையில் டயட் குறித்து சோனா ட்விட்டிரல் கூறியிருப்பதாவது,

பப்பாளி டயட்... தெரிகிறது அல்லவா... தோல் மற்றும் உடல் எடை... இப்ப்பீ.. குட்நைட் மக்களே என்று தெரிவித்துள்ளார்.

பப்பாளி டயட்டில் இருக்கும் சோனாவின் கன்னம் லேசாக வற்றியது போன்று தான் தெரிகிறது. விரைவில் ஸ்லிம் சோனாவை பார்க்கலாம் போன்று.

 

குமரி முத்துவை நடிகர் சங்கத்திலிருந்து நீக்கியது செல்லாது! - நீதிமன்றம் உத்தரவு

நடிகர் சங்கத்திலிருந்து குமரி முத்துவை நீக்கியது செல்லாது என்று சென்னை உரிமையியல் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.

நடிகர் சங்கக் கட்டிடம் கட்டும் விவகாரத்தில் உண்மைக்கு மாறான தகவல்களைப் பரப்புகிறார் என்றும், சங்த்தின் நிர்வாகிகளை தரக் குறைவாகப் பேசினார் என்றும் கூறி நடிகர் சங்கத்திலிருந்து நீக்கப்பட்டார் நடிகர் குமரி முத்து. தொடர்ந்து அவருக்கு எந்த வாய்ப்புகளும் கிடைக்காமல் போனது.

Chennai court dismisses Kumari Muthu's suspension from Nadigar Sangam

2013-ம் ஆண்டு நீக்கப்பட்ட அவர், அந்த முடிவை எதிர்த்து சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.

குமரி முத்துவை சங்கத்திலிருந்து நீக்கியது செல்லாது என இப்போது உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.