கோச்சடையான் நாயகிக்கு இன்று 27வது பிறந்த நாள்!

Deepika Turns 27 Today

மும்பை: கோச்சடையான் நாயகி தீபிகா படுகோனுக்கு இன்று 27 வயது பிறக்கிறது.

பாலிவுட்டின் முன்னணி நடிகை தீபிகா. பிரபல பாட்மின்டன் வீரர் பிரகாஷ் படுகோனின் மகள். ஓம் ஷாந்தி ஓம் படம் மூலம் இவரை அறிமுகம் செய்து வைத்தவர் ஷாரூக்கான்.

சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் இணைந்து இவர் நடிக்கும் முதல் தமிழ் படம் கோச்சடையான்.

தனது 27வது பிறந்த நாளையொட்டி சென்னை வந்திருந்தார் தீபிகா. யமஹா நிறுவனத்தின் லேடி பைக்கை நட்சத்திர ஹோட்டலில் வைத்து அறிமுகம் செய்து வைத்தார்.

தீபிகாவின் பிறந்த நாள் பரிசாக, வெள்ளை நிற பைக் ஒன்றை யமஹா நிறுவனம் பரி்சளித்தது. அந்த பைக்கில் ஏறி ஒரு போஸ் கொடுத்த தீபிகா, சென்னைக்கு வந்தது மிகுந்த சந்தோஷத்தைத் தருவதாகத் தெரிவித்தார். தனது வாழ்க்கையின் மிக முக்கியமான நிகழ்வுகளுடன் சென்னை தொடர்புள்ளதாகத் தெரிவித்தார்.

தீபிகா - ஷாரூக்கான் நடித்துள்ள புதிய படமான 'சென்னை எக்ஸ்பிரஸ்' வரும் ஜனவரி 12-ம் தேதி வெளியாகவிருக்கிறது. சூப்பர் ஸ்டாருடன் நடித்தது, சென்னை எக்ஸ்பிரஸ் படம் வெளியாவது போன்றவற்றை மனதில் வைத்தே இப்படி அவர் கூறினார்.

 

வள்ளுவர் கோட்டம் எதிரே திரையுலகினர் உண்ணாவிரதத்துக்கு அனுமதி!

Film Industry Make Fast Near Valluvar

சென்னை: மத்திய அரசின் சேவை வரியை ரத்து செய்யக் கோரி தமிழ் திரையுலகினர் நடத்தும் உண்ணாவிரதத்துக்கு வள்ளுவர் கோட்டம் எதிரில் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

நடிகர், நடிகைகள் மற்றும் திரைப்பட தொழிலில் ஈடுபட்டுள்ள அனைத்து பிரிவினருக்கும் மத்திய அரசு ரூ.12.3 சதவீதம் சேவை வரி விதித்துள்ளது

இதற்கு திரையுலகினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதனை ரத்து செய்யக் கோரி நடிகர், நடிகைகள் நாளை மறுநாள் ஜனவரி 7-ம் தேதி உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடுகிறார்கள். இந்த போராட்டத்துக்கு போலீசிடம் அனுமதி கேட்டனர்.

சென்னை வள்ளுவர் கோட்டத்தில் உண்ணாவிரதம் இருக்க போலீசார் அனுமதி அளித்துள்ளனர். அனைத்து நடிகர், நடிகைகளும் இந்த உண்ணாவிரதத்தில் பங்கேற்க வேண்டும் என்று நடிகர் சங்க தலைவர் சரத்குமார் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அன்றைய தினம் படப்பிடிப்புகள் நடைபெறாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே படப்பிடிப்புகளில் இருப்பவர்கள் நாளை சென்னை புறப்பட்டு வருகிறார்கள். முன்னணி நடிகர், நடிகைகளும் இதில் பங்கேற்கின்றனர். இயக்குனர்கள், பெப்சி தொழிலாளர்களும் கலந்து கொள்கின்றனர்.

இதற்காக வள்ளுவர் கோட்டம் எதிரில் பந்தல் அமைக்கப்படுகிறது. உண்ணாவிரதத்தையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்புக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. காலை 9 மணிக்கு உண்ணாவிரதம் மாலை 5 மணிக்கு முடிகிறது.

 

கண்ணா லட்டு தின்ன ஆசையா என் கதை.. சந்தானம் திருடிவிட்டார்! - உதவி இயக்குநர்

Santhanam Steals My Story Says   

சென்னை: என் கதையைத் திருடி கண்ணா லட்டு தின்ன ஆசையா என்ற பெயரில் படம் எடுத்துள்ளார் சந்தானம் என்று குற்றம்சாட்டியுள்ளார் உதவி இயக்குநர் நவீன் சுந்தர் என்பவர்.

காமெடி நடிகர் சந்தானம் 'கண்ணா லட்டு தின்ன ஆசையா' என்ற படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார். அவருடன் சீனிவாசன் மற்றும் விசாகா நடித்துள்ளனர்.

இந்தக் கதை தன்னுடையது என சொந்தம் கொண்டாடியுள்ளார் நவீன் சுந்தர். இவர் இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், "நான் 20 வருடங்களாக சினிமாவில் இருக்கிறேன். இயக்குனர்கள் மகேந்திரன், ராபர்ட் ராஜசேகரன், எஸ்.எஸ். ஸ்டான்லி, ரவிச்சந்திரன் போன்றோரிடம் பணியாற்றி உள்ளேன்.

இரண்டு வருடத்துக்கு முன்பு தனியாக இயக்குவதற்கு 'அன்புள்ள சிம்பு' என்ற தலைப்பில் கதையை தயார் செய்தேன். அந்த கதையை இயக்குனர் ஸ்ரீநாத்திடம் சொன்னேன்.

சந்தானம் நாயகனாகவும், சிம்பு கவுரவ வேடத்திலும் நடித்தால் சிறப்பாக இருக்கும் என்றேன். இதையடுத்து சந்தானத்திடம் கதை சொல்ல ஸ்ரீநாத் என்னை அனுப்பி வைத்தார். கதையை கேட்ட சந்தானம் நன்றாக உள்ளது என்றார்.

சிம்புவிடம் கால்ஷீட் வாங்கிய பிறகு படத்தை எடுக்கலாம் என்றார். ஆனால் இப்போது அதே கதையை "கண்ணா லட்டு தின்ன ஆசையா" என்ற பெயரில் படமாக எடுப்பதை டிரெய்லர் மூலம் அறிந்து அதிர்ச்சியானேன். இது குறித்து சந்தானத்தை தொடர்பு கொண்டு கேட்ட போது மானேஜரிடம் பேசுங்கள் என்று கூறிவிட்டு என்னை சந்திப்பதை தவிர்த்தார். இதனால் மன உளைச்சலுக்கு ஆளானேன்.

சந்தானத்தை சந்திக்க முடியவில்லை. சந்தானம் மனசாட்சி ரீதியாக எனக்கு நியாயம் தராவிட்டால் அவருக்கு எதிராக உண்ணா விரதம் இருப்பேன். தற்கொலைக்கும் முயற்சி செய்ய வேண்டி வரும். சினிமாவை நம்பி நிறைய இழந்து விட்டேன். இதையும் இழக்க விடமாட்டேன்," என்றார்.

 

'முஸ்லிம்களை தவறாக சித்தரிப்பது கமல் வழக்கம்.. விஸ்வரூபத்தை திரையிடும் முன் நாங்கள் பார்க்க வேண்டும்

Islamic Federation Demand See Viswaroopam

சென்னை: முஸ்லிம்களை தவறாகச் சித்தரிப்பது கமலின் வழக்கம். எனவே அந்தப் படம் வெளியாகும் முன்பு இஸ்லாமிய அமைப்புகளுக்குக் காட்ட வேண்டும் என்று இஸ்லாமிய அமைப்புகளின் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

கமல் எழுதி இயக்கி தயாரித்து நடித்துள்ள விஸ்வரூபம் படம் தொடர்ந்து பல்வேறு சர்ச்சைகளுக்கு உள்ளாகியுள்ளது.

தியேட்டர்களுக்கு வரும் முன் இந்தப் படம் டிடிஎச்சில் வெளியாகும் என்பதில் ஆரம்பித்து, முஸ்லிம்கள் எதிர்ப்பு வரை சர்ச்சைகள் கொஞ்சமல்ல.

இந்தப் படத்தை வெளியாகும் முன்பு தாங்கள் பார்க்க வேண்டும் என்று முன்பு சில இஸ்லாமிய அமைப்புகள் கேட்டிருந்தன. ஒருவேளை கமல் முஸ்லிம்களை தவறாக சித்தரிக்காவிட்டால், 10000 ஏழைகளுக்கு பிரியாணி விருந்தளிப்போம் என்று கூறியிருந்தனர்.

அதற்கு பதிலளித்த கமல், அண்டா அண்டாவாக பிரியாணி தயாரிக்க தயாராக இருங்கள் என்று கூறியிருந்தார்.

இந்த நிலையில் மீண்டும் 24 இஸ்லாமிய அமைப்புகளின் கூட்டமைப்பு விஸ்வரூபத்துக்கு எதிராக அறிக்கை வெளியிட்டுள்ளது.

அந்த கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ஏ கே முகமது ஹனீபா கூறுகையில், "இஸ்லாத்தையும் இஸ்லாமியர்களையும் எப்போதுமே தவறாக சித்தரிப்பது கமல் வழக்கம். விஸ்வரூபத்தில் இஸ்லாமியர்களுக்கு எதிரான காட்சிகள் உள்ளது என்று நம்பத்தகுந்த வட்டாரங்கள் மூலம் நாங்கள் அறிந்துள்ளோம்.

எனவே அந்தப் படத்தை டிடிஎச், திரையரங்குகளில் வெளியிடும் முன்பு எங்களுக்கு கமல் காட்டியே தீர வேண்டும். ஆட்சேபணைக்குரிய காட்சிகளிருந்தால் நீக்கிவிட வேண்டும். அப்படி எதுவும் இல்லாவிட்டால் கமலைப் பாராட்டும் முதல் அமைப்பு எங்களுடையதுதான்," என்றார்.

 

கற்பழிக்கப்பட்ட மாணவி வேடத்தில் நடிக்க ஆர்வம் காட்டும் நடிகைகள்

Lakshmi Rai Bia Want Play As Gang Rape Victim

சென்னை: கற்பழிக்கப்பட்ட டெல்லி மாணவியாக நடிக்க தயார் என்று தமிழ் நடிகைகள் லட்சுமிராய், பியா ஆகியோர் கூறியுள்ளனர்.

டெல்லியில், ஓடும் பஸ்சில் 23 வயது மருத்துவ மாணவி ஒருவரை 6 பேர் சேர்ந்து கற்பழித்தார்கள். அதை தடுக்க முயன்ற மாணவியின் நண்பரை கடுமையாக தாக்கினார்கள். பின்னர் இரண்டு பேரையும் பஸ்சில் இருந்து தூக்கி வீசினார்கள்.

பலத்த காயம் அடைந்த மருத்துவ மாணவி, கவலைக்கிடமான நிலையில் சிங்கப்பூர் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டு, பின் மரணம் அடைந்தார்.

இந்த சம்பவம், நாடு முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், அதை படமாக்கும் முயற்சியில் பாலிவுட் மற்றும் கோலிவுட் இயக்குநர்கள் முயற்சி மேற்கொண்டுள்ளனர்.

இதுகுறித்து நடிகை லட்சுமி ராய் கூறுகையில், "பரபரப்பான இந்த சம்பவத்தை படமாக்கினால், அதில் டெல்லி மாணவியாக நடிக்க தயார். இப்படி ஒரு படம் தயாரானால், அது சமூக விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தும். அதற்காகவே, அந்த மாணவியாக நான் நடிக்க தயாராக இருக்கிறேன்'' என்றார்.

நடிகை பியா கூறுகையில், "இந்த வேடத்தில் நடிக்க நான் தயார். சம்பளம் பற்றிக்கூட கவலையில்லை. இந்த வேடத்தில் நடித்தால் ஒரே நாளில் இந்தியா முழுக்க பிரபலமாகிடுவேன்," என்றார்.