கல்யாண சமையல் சாதம் காமெடியில் கலக்கும் லேகா வாஷிங்டன்

My Career Is Inundated With Offbeat Roles

பிரசன்னாவுக்கு திருமணத்திற்கு பின் முதன் முதலாக நடிக்கும் படம் "கல்யாண சமையல் சாதம்" நகைச்சுவை கலந்த படமாக தயாராகிறது.

ஒரு திருமணத்தைச் சுற்றி நடக்கும் சம்பவங்கள்தான் படத்தின் கதை. இந்தப் படத்தை குறும்படங்களின் மூலம் விருது குவித்த ஆர்.எஸ். பிரசன்னா எழுதி இயக்குகிறார்.

இந்த படத்தில் கலக்கல் காமெடி ரோலில் நடித்திருப்பது தனக்கு திருப்தியளிக்கிறது என்கிறார் நடிகை லேகா வாஷிங்டன்.

சிம்பு உடன் சண்டையா?

ஜெயம் கொண்டான்' படம் மூலம் பிரபலமானவர் லேகா வாஷிங்டன். 'கெட்டவன்' படத்தில் சிம்புவுடன் இணைந்து இவர் நடிப்பதாக இருந்தது. அந்த படம் நின்று போனது. தற்போது 'கல்யாண சமையல் சாதம்' படம்தான் கை கொடுக்க வேண்டும்.

குறும்படம் என்ன ஆச்சு லேகா?

லேகா வாஷிங்டன் சிம்புவை வைத்து குறும்படம் எடுத்ததாகவும் அப்போது படப்பிடிப்பில் இருவருக்கும் தகராறு ஏற்பட்டதாகவும் செய்திகள் வந்தது. இருவரும் ஒருவரையொருவர் திட்டிக்கொண்டு சண்டை போட்டதாகவும் கூறப்பட்டது.

அதெல்லாம் வதந்தி நம்பாதீங்க...

சிம்புவுக்கும், தனக்கும் தகராறு நடந்ததாக வந்த செய்திகள் வதந்தி என்கிறார் லேகா. நான் குறும்படம் எடுக்கவே இல்லை.ஓட்டலுக்கு அவருடன் போனதாக வந்த செய்தியும் தவறு.

காமெடியில் கலக்குறேன்

நான் தற்போது பிரசன்னாவுடன் 'கல்யாண சமையல் சாதம்' படத்தில் நடிக்கிறேன். இந்த படத்தின் கதையை கேட்டபோது என்னால் சிரிப்பை அடக்க முடியவில்லை. நல்ல கதையம்சம் உள்ள படத்தில் மட்டுமே நான் நடிக்கிறேன்.

பிரசன்னாவும் லேகா வாஷிங்டனும்

பிரசன்னா திருமணத்திற்கு கலக்கல் காமெடி படத்தில் லேகா உடன் ஜோடி சேர்ந்துள்ளார். இந்த திரைப்படத்தில் டெல்லிகணேஷ், உமா பத்மநாபன் ஆகியோர் நடித்துள்ளனர். அச்சமுண்டு அச்சமுண்டு படத்தை தயாரித்த ஆனந்த் கோவிந்தனும், இயக்கிய அருண் வைத்தியநாதனும் இந்தப் படத்தை தயாரிக்கின்றனர்.

 

'காதலி'க்காக மாதக்கணக்கில் காத்திருந்த 'கதிர்வேலன்'!

Udhayanidhi Waits Nayanthara Months

இது கதிர்வேலன் காதலி படத்தின் அறிவிப்பு பல நாட்களுக்கு முன்பே வந்திருந்தாலும், ஷூட்டிங் களைகட்டாமல் இருந்தது. காரணம், உதயநிதியின் காதலியாக நடிக்க வேண்டிய நயன்தாரா, அஜீத்துடன் டூயட் பாடிக் கொண்டிருந்தார்!

உதயநிதியை வைத்து எந்த காட்சியும் எடுக்க முடியவில்லை. காரணம் அவர் வரும் காட்சிகளில் ஒன்று நயன்தாரா இருப்பார்... அல்லது சந்தானம் இருப்பார். சந்தானமும் செம பிஸி.

ஆகவே வேறு வழியின்றி இந்த இருவருக்காகவும் காத்திருந்தார் கதிர்வேலனான உதயநிதி.

அஜீத் பட கமிட்மென்டுகளை முடித்துவிட்டு நேற்றுதான் கதிர்வேலன் காதலி படத்தின் ஷூட்டிங்குக்கு கோவை வந்தார் நயன்தாரா. அவர் தொடர்புடைய காட்சிகளை மளமளவென்று ஷூட் செய்ய ஆரம்பித்துள்ளார் இயக்குநர் எஸ் ஆர் பிரபாகரன். நாளையிலிருந்து உதயநிதியுடன் டூயட் பாடவிருக்கிறார் நயன்தாரா. இவர்களுடன் பின்னர் சந்தானம் சேர்ந்து கொள்வாராம்.

ரெட் ஜெயன்ட் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார்.

 

நயன்தாராவுக்கு நான் ஏன் பிரியாணி விருந்து கொடுத்தேன் தெரியுமா ? - மனம் திறக்கிறார் ஆர்யா

Arya Answers Rumors Linking Him With Nayanthara

சென்னை: நடிகை நயன்தாரவுக்கும், ஆர்யாவுக்கும் நெருக்கம் ஏற்பட்டுள்ளதாக கிசு கிசுக்கள் பரவியுள்ள நிலையில், நயன்தாராவுக்கு பிரியாணி விருந்து கொடுத்தது ஏன்? என ஆர்யா விளக்கம் அளித்துள்ளார்.

ஏற்கனவே பாஸ் என்கிற பாஸ்கரன் படத்தில் இருவரும் ஜோடியாக நடித்தார்கள். தற்போது `வலை', ராஜா ராணி, படங்களிலும் இணைந்து நடிக்கிறார்கள். பிரபு தேவாவுடனான காதலை முறித்துவிட்டு நயன்தாரா மீண்டும் நடிக்க வந்ததை ஆர்யா விருந்து வைத்து கொண்டாடியதாக கூறப்பட்டது.

அப்போது நயன்தாராவை ஆர்யா தனது வீட்டுக்கு அழைத்தார். அங்கு அவருக்கு ருசியான பிரியாணி விருந்து அளித்தார். எனவே, இருவருக்கும் காதல் மலர்ந்துள்ளது என்று திரையுலகினர் பேசிக் கொள்கிறார்கள்.

இது குறித்து ஆர்யாவிடம் கேட்ட போது, 'எனது வீட்டில் அம்மா சுவையாக பிரியாணி சமைப்பார். நிறைய பேர் அதை சாப்பிட்டு விட்டு ருசியாக இருந்ததாக மற்றவர்களிடம் சொல்லி உள்ளனர். எனவே நிறைய பேர் பிரியாணி சாப்பிட ஆர்வமாக இருந்தார்கள். அவர்களுக்காக வீட்டில் விருந்து வைத்தேன். நயன்தாராவும் அந்த விருந்துக்கு வந்தார்.

மேலும் பல நடிகர்கள் மற்றும் இயக்குனர்களும் வந்து இருந்தார்கள். நயன்தாராவுக்கு மட்டும்தான் பிரியாணி விருந்து வைத்தேன் என்று வதந்தி பரப்பி விட்டார்கள். திருமணத்துக்கு நான் பெண் தேடுகிறேன். பொருத்தமான பெண் கிடைத்ததும் திருமணம் செய்து கொள்வேன்' என ஆர்யா கூறினார்.

 

அமீருடன் கை கோர்க்கும் அஜீத்

Are Ajith Ameer Eyeing Project Together

சென்னை: அமீரின் அடுத்த படத்தில் அஜீத் நடிக்க இருப்பதாக சில வதந்திகள் பரவி வருகின்றன.

‘மெளனம் பேசியதே', ராம், பருத்திவீரன் படங்களைத் தொடர்ந்து அமீரின் ஆதிபகவன் படம் வெளியாகி திரையரக்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. ஜெயம் ரவி ஹீரோவாக நடித்துள்ள இப்படத்தில் நீதுசந்த்ரா ஹீரோயின்.

சூர்யா, ஜீவா, கார்த்தி மற்றும் ஜெயம் ரவியைத் தொடர்ந்து, அமீரின் அடுத்த ஹீரோ அஜீத் தான் எனக் கூறப்படுகிறது. தானே தயாரிக்க இருப்பதால், நல்ல மார்க்கெட் உள்ள நடிகராக தேடி, அஜீத்தை அமீர் தேர்வு செய்துள்ளாராம்.

 

சிறைக்குப் போகும் சஞ்சய் தத்… என்னாவாகும் போலீஸ் கிரி

Will Sanjay Dutt S Imprisonment Affect Policegiri

சஞ்சய் தத் சிறைக்குப் போனாலும், அவர் ஹீரோவாக நடித்துக் கொண்டிருக்கும் போலீஸ்கிரி படத்துக்கு எந்த பாதிப்பும் இல்லையாம்.

தமிழில் வெளியான சாமி படம்தான் இந்தியில் போலீஸ்கிரி என்ற பெயரில் வெளியாகிறது. இந்தப் படத்தில் சஞ்சய் தத் ஹீரோவாக நடித்துள்ளார். கேஎஸ் ரவிக்குமார் இயக்கியுள்ளார்.

கடந்த சில மாதங்களாக இதன் படப்பிடிப்பு வேக வேகமாக நடந்து வந்தது. பொங்கல் விடுமுறையின்போது, சென்னையில் படப்பிடிப்பு நடந்தது. அப்போது இயக்குநர் கேஎஸ் ரவிக்குமாரும் சஞ்சய் தத்தும் ரஜினியைச் சந்தித்துப் பேசினர்.

இந்த நிலையில், இப்போது சஞ்சய் தத்துக்கு மும்பை குண்டு வெடிப்பு வழக்கில் 5 ஆண்டு சிறைத் தண்டனை அளித்துள்ளது உச்சநீதிமன்றம்.

ஏற்கெனவே அவர் 18 மாதங்கள் சிறையில் இருந்ததால், இன்னும் மூன்றரை ஆண்டுகளை சிறையில் கழித்தாக வேண்டும்.

இதனால் போலீஸ்கிரி படத்துக்கு பாதிப்பு ஏற்படுமா என்று கேட்டபோது, கேஎஸ் ரவிக்குமார் ஷூட்டிங்கை கடந்த வாரமே முடித்துவிட்டதாகவும், இப்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடப்பதால் படம் திட்டமிட்டபடி ஜூன் மாதம் வெளியாகும் என்றும் தெரிவித்தனர்.

அடுத்த மூன்றரை ஆண்டுகளுக்கு சஞ்சய் தத் ரசிகர்களுக்கு போலீஸ் கிரிதான் ஒரே ஆறுதல்!

 

சிங்கம் 2... தேவிஸ்ரீபிரசாத் இசையில் பாபா செகல்!

Baba Seghal Croons Singam 2

சிங்கம் 2 படத்துக்காக தேவிஸ்ரீபிரசாத் இசையில் தனது இரண்டு பாடல்களைப் பாடியுள்ளார் பாபா செகல்.

தண்டா தண்டா பாணி.. ஆல்பம் மூலம் பிரபலமானவர் பாபா செகல். சில படங்களில் நடிக்கவும் செய்துள்ளார்.

தமிழில் ஏற்கெனவே முப்பொழுதும் உன் கற்பனைகள், ஒஸ்தி, சகுனி, அலெக்ஸ் பாண்டியன் படங்களில் பாடியுள்ளார். தே்வி ஸ்ரீ பிரசாத் இசையில் சிங்கம் படத்தில் இடம்பெற்ற 'காதல் வந்தாலே...' பாடலைப் பாடியவர் பாபா செகல்தான். அந்தப் பாடல் பெரும் ஹிட் ஆனது.

இப்போது ஹரி இயக்கத்தில் சூர்யா நடித்துவரும் சிங்கம் 2 படத்திலும் பாபா செகலைப் பாட வைத்துள்ளார் தேவி ஸ்ரீ பிரசாத்.

சிங்கம் 2 படத்தின் முக்கிய காட்சிகள் தென் ஆப்ரிக்கா, மலேசியா மற்றும் சென்னையில் படமாக்கப்பட்டுள்ளன. ஹாலிவுட் ஸ்டன்ட் நடிகர் டேனி சபானி இதில் சூர்யாவுடன் மோதுகிறார். விவேக்கும் சந்தானமும் இணைந்து காமெடி செய்துள்ளனர்.

அனுஷ்கா, ஹன்சிகா இருவரும் சூர்யாவுக்கு ஜோடியாக நடிக்கிறார்கள்.

 

பவர் ஸ்டாருக்குப் போட்டியாக வெங்கட் பிரபு!!

Venkat Prabhu Appears An Item Number

தமிழ் சினிமாவில் ஒற்றைப் பாடலுக்கு நடனமாட பவர் ஸ்டார் சீனிவாசனையும், ஒற்றைப் பாடல் பாட சிம்புவையும் பயன்படுத்தி வருகிறார்கள். எல்லாம் பப்ளிசிட்டிக்காகத்தான்.

இப்போது அந்த வரிசையில் வெங்கட் பிரபுவையும் சேர்த்துவிடுவார்கள் போலிருக்கிறது. ரெண்டாவது படம் என்ற படத்தில் ஒற்றைப் பாடலுக்கு இனியாவுடன் கோட் சூட் போட்டுக் கொண்டு நடனமாடுகிறார் வெங்கட் பிரபு.

வெங்கட் பிரபு தற்போது கார்த்தி-ஹன்சிகா மொத்வானி நடிப்பில் ‘பிரியாணி' என்ற படத்தை இயக்கி வருகிறார்.

சிஎஸ் அமுதனின் ரெண்டாவது படத்தில் 1980களில் பிரபலமான மெட்டில் ஒரு பாட்டுப் போட்டிருக்கிறார் இசையமைப்பாளர் கண்ணன். அந்தக் காலத்து ஸ்டைலிலேயே நடனமும் அமைத்திருக்கிறார் நடன இயக்குனர் கல்யாண். இப்பாடலுக்கு நீங்கள் ஆடினால் நன்றாக இருக்கும் என வெங்கட் பிரபுவிடம் கேட்டுக் கொண்டாராம் அமுதன். ஜோடி இனியா என்றதும் உடனே ஒப்புக் கொண்டு இனியாவுடன் நடனமாடுகிறார்.

இதுகுறித்து வெங்கட் பிரபு கூறுகையில், "ரெண்டாவது பட'த்தின் இயக்குர் சி.எஸ்.அமுதன் எனக்கு நெருங்கிய நண்பர். இப்படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடவேண்டும் என கேட்டுக் கொண்டார். அவருடைய அன்பான அழைப்பின் பேரிலேயே இப்பாடலில் நடனமாட விருப்பம் தெரிவித்தேன்.

தற்போதெல்லாம் நடிகர்களின் கால்ஷிட் தேதியை வாங்குவதைவிட நடிகைகளின் கால்ஷீட் வாங்குவதுதான் பெரும் கஷ்டமாக உள்ளது. பிரியாணி படத்தின் படப்பிடிப்பை மாதத்திற்கு நிறுத்தி வைத்துள்ளோம். கார்த்தி ‘ஆல் இன் ஆல் அழகுராஜா' படப்பிடிப்புக்குப் போய்விட்டார்.

அடுத்த மாதம்தான் ஹன்சிகா வருகிறார். அவர் வந்தததும் ‘பிரியாணி' படப்பிடிப்பு மீண்டும் தொடங்கிவிடும். விரைவில் படப்பிடிப்பை முடித்து வரும் ஆகஸ்டில் படத்தை வெளியிட முடிவு செய்துள்ளோம், என்றார்.

 

துள்ளிவிளையாடு படத்துக்கு யு சான்றிதழ்.. மார்ச் 29-ல் ரிலீஸ்!

Thulli Vilayadu Gets Clean U

வின்ஸ்டன் செல்வா இயக்கத்தில் உருவாகி வரும் துள்ளி விளையாடு படத்துக்கு சென்சார் குழு யு சான்றிதழ் அளித்துள்ளது.

வின்சென்ட் செல்வா இயக்க ஆர்.பி. ஸ்டூடியோஸ் தயாரிக்க யுவராஜ் -தீப்தி, பிரகாஷ்ராஜ், ஜெயபிரகாஷ், சென்றாயன், பரோட்டா சூரி ஆகியோர் நடித்துள்ள படம் துள்ளி விளையாடு.

படத்தின் அனைத்துப் பணிகளும் முடிந்து, வெளியீட்டுக்குத் தயாராகிவிட்டது. நேற்று இந்தப் படத்தை சென்சார் குழுவினருக்கு போட்டுக் காட்டினர் தயாரிப்பாளர்கள்.

படம் பார்த்த சென்சார் குழுவினர், எந்த கட்டும் இல்லாமல் க்ளீன் யு சான்று அளித்தனர்.

இதுகுறித்து படத்தின் இயக்குநர் வின்சென்ட் செல்வா கூறுகையில், "அனைத்துத் தரப்பினரும் பார்க்கும் வகையில் காதல், ஆக்ஷன் கலந்த விறுவிறுப்பான காட்சிகள் கொண்ட படமாக துள்ளி விளையாடு வந்துள்ளது. இந்தப் படம் சென்சார் குழுவுக்கே ரொம்பப் பிடித்துவிட்டது. எந்த கட்டும் தரவில்லை. தமிழ் சினிமா ரசிகர்களுக்கு முழுமையான திருப்தி அளிக்கும் இந்தப் படம்!," என்றார்.

வரும் மார்ச் 29-ம் தேதி உலகமெங்கும் வெளியாகிறது துள்ளி விளையாடு.

 

நான் ரஜினி, கமல் மாதிரி வருவேன்- உதயகிரண் பேட்டி

I Will Become Like Rajini Or Kamal Says Actor Udaykiran

சென்னை: இயக்குனர் கே.பாலசந்தரின் பொய் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான நடிகர் உதய கிரன், நான் ரஜினி கமல் மாதிரி வருவேன் என பேட்டி அளித்துள்ளார்.

தற்போது மீண்டும் தனது ராசியை ஒ-ரு அதிரடி ஆக்ஷன் படம் மூலம் பறிச்சித்து பார்க்க உள்ளார். இந்த படத்தின் மீது உதய கிரண் மிகுந்த நம்பிக்கை வைத்திருக்கிறார்.

இதுபற்றி உதய கிரண் கூறும் போது, " ரஜினி சார், கமல் சார், பிரகாஷ் ராஜ் சார் போன்றவர்களை அறிமுகப்படுத்திய இயக்குநர் சிகரம் பாலசந்தர் சார் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானதில் எனக்கு மிகவும் பெருமையா இருக்கு. பொய் படம் பெரிய அளவில் வெற்றி பெறாதது துரதிஷ்டமானது. ஆனால் இந்த படத்தின் கதை எனக்கு மிகுந்த நம்பிக்கையை கொடுத்து இருக்கு. நிச்சயமா நான் ரஜினி, கமல் மாதிரி வருவேன். இந்த கதையின் மேல் உள்ள நம்பிக்கையில் தான் நான் இதை கூறுகிறேன்.

எனக்கு இருக்கும் சாக்லெட் பாய் இமேஜை உடைக்க நான் கடுமையாக உழைத்திருக்கிறேன். காரணம் இது ஒரு ஆக்ஷன் படம். இதற்காக என்னை உருமாற்றிக்கொள்ள வேண்டி வந்தது. கதாநாயகியை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இந்த பெரிய பட்ஜெட் படத்தை ப்லையிங் கலர்ஸ் என்ற நிறுவனம் தயாரிக்க உள்ளது. இப்படத்திற்கு வினோத் குமார் இசையமைக்க உள்ளார். சதீஷ் ஒளிப்பதிவு செய்கிறார். ஒரு விறுவிறுப்பான படத்தை தருவேன் என்று இயக்குநர் சுதாகர் என்னிடம் உறுதி அளித்திருக்கிறார். படத்தின் பெயர் விரைவில் வெளியிடப்படும்" என்றார்.

 

ஆஸ்கர் ரவிச்சந்திரன் தயாரிப்பில் திருமணம் எனும் நிக்காஹ்!

Thirumanam Enum Nikkah

ஆஸ்கர் ரவிச்சந்திரன் தயாரிப்பில் உருவாகும் புதிய படம் திருமணம் எனும் நிக்காஹ். ஜெய் இதில் நாயகனாக நடிக்கிறார்.

'வல்லினம்', 'மரியான்', ‘பூலோகம்', 'ஐ' போன்ற வித்தியாசமான மற்றும் சுவாரஸ்யமான தலைப்புகள் கொண்ட பெரிய பட்ஜெட் படங்களை தயாரித்து வரும் ஆஸ்கார் பிலிம்ஸ் பிரைவேட் லிமிடெட், அடுத்து தயாரிக்கும் இந்த 'திருமணம் எனும் நிக்காஹ்'வில் ஜெய்யுடன் ஜோடி சேருகிறார் நஸ்ரியா நஸீம்.

பொதுவாக ஆஸ்கர் ரவிச்சந்திரன் அதிகம் பேசாதவர். ஆனால் இந்தப் படத்தின் திரைக்கதையை சிலாகிக்கிறார் இப்படி:

நான் கேட்ட மிகச் சிறந்த கதைகளில் 'திருமணம் எனும் நிக்காஹ்' ஒன்று. சில கதைகள் சிரிக்க வைக்கும், சில கதைகள் சிந்திக்க வைக்கும். ஆனால் இந்த இரண்டு அம்சங்களையும் காதல் மற்றும் நல்ல இசையோடு சேர்ந்து கொடுத்தால் நிச்சயம் வெற்றி பெரும் என்பதில் சந்தேகம் இல்ல. புதுமுக இயக்குனர் அனீஸ் இயக்கும் 'திருமணம் எனும் நிக்காஹ்' இந்த ரகத்தை சேர்ந்தது," என்கிறார் ரவி.

படத்தின் கதாநாயகன் ஜெய் கூறுகையில், "'எங்கேயும் எப்போதும்' படத்தின் மாபெரும் வெற்றிக்கு பிறகு நான் கதைகளை மிகுந்த கவனத்துடன் தேர்வு செய்து கொண்டிருக்கிறேன்.

'திருமணம் எனும் நிக்காஹ்' எனது முன்னேற்றத்திற்கு மிக முக்கியம்மான படமாக கருதுகிறேன். இப்படத்தில் இன்னொரு புதுமுக கதாநாயகியும்,மற்றொரு கதாபாத்திரத்தில் மிக பிரபலமான நடிகரும் நடிக்க உள்ளனர். அவர்கள் யார் என்பதை கூடிய விரைவில் உங்களுக்கு அறிவிப்பார்கள்," என்றார்.

இப்படத்துக்கு ஜிப்ரான் இசையமைக்கிறார். படத்தின் பாடல்களை மதன் கார்கி, பார்வதி, தேன்மொழி தாஸ், காதல்மதி, மற்றும் கார்த்திக் நேத்தா எழுதுகிறார்கள்.

மலையாளத்தில் வெளிவந்து வெற்றி பெற்ற உஸ்தாத் ஹோட்டல் படத்துக்கு ஒளிபதிவு செய்த லோகநாதன் இந்தப் படத்துக்கு ஒளிப்பதிவு செய்கிறார்.

மதன் கார்கியுடன் இணைந்து வசனம் இயற்றுவதோடு கதை, திரைக்கதை, இயக்கம் ஆகிய பொறுப்புகளை மேற்கொண்டுள்ளார் அனிஸ். இவர் நடிகர் மற்றும் இயக்குனருமான நாசரிடம் இணை இயக்குனராக பணியாற்றியவர்.

 

ஒரு நடிகையும் ரெண்டு ஹீரோவும்!

எதற்கும் இருக்கட்டுமே என்று ஒன்றுக்கு இரண்டாக பொருட்களை வைத்துக் கொள்ளலாம்... மனசுக்குப் பிடிச்ச மாதிரி ஆட்களை வைத்துக் கொள்ள முடியுமா... முடியும் என்கிறார் தமிழ், தெலுங்கு சினிமாவில் இன்னும் உச்சத்திலிருக்கும் அணில் கடிச்ச பழ நடிகை!

ஆம்... அம்மணி சென்னைக்கு வந்தால், பாண்டித்துரை படத்தில் சில்க் ஸ்மிதாவுக்கு மயில் தோகையில் பெருக்கி விடுவாரே செந்தில்... அந்த ரேஞ்சுக்கு விழுந்து விழுந்து கவனித்துக் கொள்கிறாராம் அந்த வட்டிருப்பு மண்டை நடிகர்.

இதே 'பழம்' ஹைதராபாதுக்கோ, கேரளாவுக்கோ போனால், கூடவே கழுத்தில் உரசும் நெக்லஸ் மாதிரி க்ளோஸாக இருந்து கவனித்துக் கொள்கிறாராம் இன்னொரு டோலிவுட் நடிகர்.

நான் பாதுகாப்பாக இருக்கிறேனே மம்மி என்று அடிக்கடி போன் போட்டு அம்மாவிடம் சொல்லிவிடுகிறாராம்.

கோலிவுட்... டோலிவுட்டில் ஓகே... வெளிநாடு போகும்போது? அதை அந்தந்த பட ஹீரோ பார்த்துக் கொள்வாராம்!!